கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் பிரயாணி மற்றும் நோயாளியின் தொழுகை

சுயபுத்தியுடன் உள்ள அனைத்து முஸ்லிம்கள் மீதும் எல்லா நிலைகளிலும் தொழுகை கடமையான ஒன்றாகும். எனினும் மக்களின் நிலைகள், தேவைகள் வேறுபடுவதை இஸ்லாம் கவனத்திற் கொண்டுள்ளது. நோயாளி, பிரயாணிகளும் இவ்வாறானவர்களில் உள்ளவர்களே. அவ்விரு சாராருடைய தொழுகை பற்றி இப்பாடத்தில் நாம் கற்போம்.

  • பிரயாணியின் தொழுகை சட்டங்களை அறிதல்.
  • நோயாளியின் தொழுகை சட்டங்களை அறிதல்.
  • இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

    சுயபுத்தியுடன் உள்ள அனைத்து முஸ்லிம்கள் மீதும் எல்லா நிலைகளிலும் தொழுகை கடமையான ஒன்றாகும். எனினும் மக்களின் நிலைகள், தேவைகள் வேறுபடுவதை இஸ்லாம் கவனத்திற் கொண்டுள்ளது. நோயாளி, பிரயாணிகளும் இவ்வாறானவர்களில் உள்ளவர்களே.

    பிரயாணிக்குரிய ஸுன்னாக்கள் எவை?

    ஒரு பிரயாணிக்கு தனது பிரயாணத்தின் போதும் நான்கு நாட்களுக்குக் குறைந்தளவு வேறூரில் தங்கியிருக்கும் போதும் நான்கு ரக்அத்களைக் கொண்ட தொழுகைகளை இரண்டு ரக்அத்களாக சுருக்கித் தொழுவது ஸுன்னத்தாகும். ளுஹர், அஸர், இஷா ஆகிய தொழுகைகளை நான்கு ரக்அத்களுக்குப் பதிலாக இரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். எனினும் உரிலுள்ள இமாமமைத் துயர்ந்து மஃமூமாகத் தொழுதால் அவரைப் பின்பற்றி நான்கு ரக்அத்களாகவே தொழ வேண்டும்.

    பஜ்ருடைய முன் ஸுன்னத்தைத் தவிர ஏனைய முன், பின் ஸுன்னத்துக்களை தொழாமல் விடுவதே பிரயாணிக்கு ஸுன்னத்தாகும்.

    இலகுபடுத்தவும், இரக்கம் காட்டவும், சிரமத்தை நீக்கவும் குறிப்பாக பிரயாணம் செய்து கொண்டிருக்கும் போது ளுஹர், அஸர் ஆகியவற்றையும் மஃரிப், இஷா ஆகியவற்றையும் ஏதாவதொரு நேரத்தில் சேர்த்துத் தொழவும் முடியும்.

    நோயாளியின் தொழுகை

    தொழுகையில் நிலையில் நிற்க முடியாத நோயாளிகளுக்கு, நிற்க சிரமமானவர்களுக்கு, அல்லது நின்று தொழுதால் குணமடையத் தாமதமாகும் என்ற நிலையிலுள்ளவர்களுக்கு உட்கார்ந்து தொழலாம். அதுவும் முடியாவிட்டால் பக்கவாட்டில் சாய்ந்து கொண்டும் தொழுலாம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "நீர் நின்ற நிலையில் தொழும், முடியா விட்டால் உட்கார்ந்த நிலையில், அதுவும் முடியாவிட்டால் பக்கவாட்டில் சாய்ந்து கொண்டு தொழவும்". (புஹாரி 1066).

    நோயாளியின் தொழுகைக்கான பிரத்தியேக சட்டங்கள்

    ١
    ருகூஃ, ஸுஜூத் செய்ய முடியாதவர்கள் முடியுமானளவு செய்கை செய்ய வேண்டும்.
    ٢
    தரையில் உட்கார முடியாதவர்கள் கதிரை போன்றவற்றில் உட்காரலாம்.
    ٣
    நோய் காரணமாக ஒவ்வொரு தொழுகைக்கும் வுழூச் செய்ய முடியாதவர்கள் ளுஹர், அஸருக்காக ஒரு வூழூவும், மஃரிப், இஷாவுக்காக இன்னொரு வுழூவும் என சேர்த்து செய்யலாம்.
    ٤
    நோய் காரணமாக தண்ணீர் பயன்படுத்த முடியாதவர்கள் தொழுகையை நிறைவேற்ற தயம்மும் செய்யலாம்.

    உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


    பரீட்சையை ஆரம்பிக்கவும்