கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் இஹ்ராம் கட்டியவர் தவிர்க்க வேண்டியவை

ஹஜ் அல்லது உம்ராச் செய்பவர் தான் இஹ்ராத்துடன் இருக்கும் நிலையில் சில விடயங்களைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். அவைதான் இப்பாடத்தில் நாம் கற்கப் போவதாகும்.

  • இஹ்ராம் கட்டியவர் தவிர்க்க வேண்டியவற்றை அறிதல்.
  • தவிர்க்க வேண்டியவற்றைச் செய்யும் போதுள்ள சட்டங்களை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

இந்தப் பாடத்தின் மொழிபெயர்ப்பு பின்வரும் மொழிகளில் கிடைக்கிறது:

இஹ்ராம் கட்டியவர் தவிர்க்க வேண்டியவை

அவை ஹஜ், அல்லது உம்ராவுக்காக இஹ்ராம் நிய்யத் வைத்த ஒருவர் அவ்வணக்கம் நிறைவேறும் வரை செய்யாது தடுக்கப்பட்ட விடயங்களாகும்.

இஹ்ராம் கட்டியவர் தவிர்க்க வேண்டியவை மூன்று வகைப்படும்.

١
பொதுவாக ஆண் பெண் மீது உள்ள தடைகள்
٢
ஆண்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகள்
٣
பெண்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகள்

பொதுவாக ஆண் பெண் மீது உள்ள தடைகள்:

١
தலைமுடி மற்றும் உடம்பின் ஏனைய பாகங்களிலுள்ள முடிகளை நீக்குதல், நகங்களை வெட்டுதல்.
٢
உடலிலோ, உடையிலோ மணம் பூசுதல்.
٣
உடலுறவு கொள்ளல் , மனைவியை இச்சையோடு தொடுதல், கட்டியணைத்தல்.
٤
திருமணம் நடத்தல், திருமணம் பேசுதல் . இஹ்ராம் அணிந்தவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரியே.
٥
பறவைகள், தரை வாழ் பிராணிகளை வேட்டையாடுதல்

ஆண்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகள்

١
சேர்ட், தோப், காற்சட்டைகள் போன்ற உடலின் உறுப்புக்களை வர்ணிக்கும் வகையில் சூழ தைத்த ஆடைகளை அணிதல்.
٢
தலையுடன் ஒட்டிய பொருட்கள் மூலம் தலையை மறைத்தல். தலையுடன் சேர்ந்திராத கட்டிடங்கள், மற்றும் வாகனக் கூரைகள், குடைகள் போன்றவற்றால் நிழல் பெறுவதில் ஆட்சேபனையில்லை.

பெண்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகள்

١
நிகாப் அணிதல், முகத்தை மூடுதல். எனினும் அவள் முன்னிலையில் அந்நிய ஆண்கள் இருந்தால் அவளின் முகத்தை மறைத்துக் கொள்ளலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் முகமூடி அணிவதால் அவளுக்கு எவ்விதப் பாதிப்புமில்லை.
٢
கையுறைகள் (கைமேஸ்) அணிதல்.

மறதி, அறியாமை, நிர்ப்பந்தம் போன்ற காரணங்களினால் தடுக்கப்பட்ட இவற்றில் ஏதாவதொன்றை செய்வதால் குற்றமேதுமில்லை. அல்லாஹ் கூறுகின்றான் : “இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்)” (அஹ்ஸாப் : 5). எனினும் நினைவு வந்தால், அல்லது தடுக்கப்பட்டதென அறிந்தால் உடனடியாக அவற்றைத் தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.

நியாயமான காரணத்திற்காக வேண்டுமென்றே இவற்றை செய்தால் அவர் பரிகாரம் கொடுக்க வேண்டும். குற்றமேதும் கிடையாது.

அல்லாஹ் கூறுகின்றான் : “அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளை மழிக்காதீர்கள்; ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ (தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்றல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானி கொடுத்தல் வேண்டும். பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானி கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானி கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்”. (பகரா : 196).

நியாயமான காரணமின்றி வேண்டுமென்றே இவற்றை செய்தால் அவர் பரிகாரம் கொடுக்க வேண்டும். அவர் மீது பாவமும் உண்டு.

பரிகாரம் கொடுப்பதன் அடிப்படையில் இஹ்ராம் அணிந்தவர் தவிர்ந்து கொள்ள வேண்டியவை நான்கு வைகப்படும் :

١
முதலாவது : பரிகாரமில்லாதவை. அது திருமண ஒப்பந்தம் செய்வதாகும்.
٢
இரண்டாவது : பரிகாரமாக ஒட்டகம் அறுத்துப் பலியிட வேண்டியவை. அது இஹ்ராமில் இருந்து நீங்கி விடுவதில் உள்ள இரு நிலைகளில் முதல் நிலைக்கு முன்பே தனது மனைவியுடன் உடல் உறவில் ஈடு படுதலாகும்.
٣
மூன்றாவது : அதைப் போன்ற ஒன்றை அல்லது அதற்கு சமமானதை பரிகாரமாகக் கொடுக்க வேண்டியவை. அது வேட்டையாடுதலாகும்.
٤
நான்காவது : முன்னர் கூறப்பட்டுள்ள வசனத்தில் நோவினைக்காக செய்ய வேண்டிய பரிகாரத்தின் அடிப்படையில் நோன்பு நோற்றல், தர்மம் செய்தல், பலியிடல் உள்ளிடவற்றில் ஏதேனும் ஒன்றை பரிகாரமாகச் செய்தல். அந்த நோவினை தலைமுடியை மழித்தலாகும். ஏற்கனவே கூறப்பட்ட மூன்று வகையான தடுக்கப்பட்டவைகளைத் தவிர்ந்த ஏனைய தடுக்கப்பட்டவற்றைச் செய்தாலும் இந்த நோவினைக்கான பரிகரிகாரத்தைச் செய்ய வேண்டுமென அறிஞர்கள் இதனுடன் இணைத்துக் கூறியுள்ளனர்.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்