கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் மோசமான சம்பாத்தியம் மற்றும் தடுக்கப்பட்ட பரிவர்த்தனைகள்

மோசமான சம்பாத்தியம், அதன் காரணிகள், தீங்குகள் பற்றியும், தடுக்கப்பட்ட பரிவர்த்தனை வகைகள் பற்றியும் இப்பாடத்தில் கற்போம்.

  • மோசமான சம்பாத்தியம் மற்றும் அதன் தீங்குகளை அறிதல்.
  • தடுக்கப்பட்ட நிதிப் பரிவர்த்தனைகளை அறிதல்..

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

சம்பாத்தியத்தில் அனுமதிக்கப்பட்ட, நல்ல தூய்மையானவைகளும் உள்ளன, தடுக்கப்பட்ட மோசமான தீயவைகளும் உள்ளன. அல்லாஹ் கூறுகிறான் : "நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்; அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்". (பகரா : 267).

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "மக்களுக்கு ஒரு காலம் வரும், அப்போது ஒரு மனிதன் தான் சம்பாதித்த பணம் ஹலாலா அல்லது ஹராமா எனப் பொருட்படுத்த மாட்டான்". (புஹாரி 2083).

மோசமான சம்பாத்தியம்

இது உரிமையின்றி, மார்க்க அனுமதியின்றி பெறப்பட்ட சொத்துக்களைக் குறிக்கின்றது.

மோசமான சம்பாத்தியத்தின் வழிகள்

١
மக்களின் பணத்தை முறையற்ற விதத்தில் கையகப்படுத்தல். அநீதி, ஏமாற்று, மோசடி, கொள்ளை, உரிமையாளரின் விருப்பமின்றி எடுக்கப்பட்டவை இதில் அடங்கும்.
٢
மார்க்க ரீதியாக தடுக்கப்பட்ட பரிவர்த்தனைகள் மூலம் சம்பாதித்தல் . வட்டி, சூதாட்டம், மற்றும் மது, பன்றியிறைச்சி, இசைக் கருவிகள் போன்ற தடுக்கப்பட்டவற்றை விற்பதன் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் இதில் அடங்கும்.

மோசமான சம்பாத்தியத்தின் காரணங்கள்

١
அல்லாஹ்வைப் பற்றிய அச்சம், வெட்கம் இல்லாமை. ஒரு மனிதனிடமிருந்து வெட்கம் களையப்பட்டால் தனது சம்பாத்தியம் ஹராமானதா? ஹலாலானதா? என்பதைப் பொருட்படுத்த மாட்டான்.
٢
துரித இலாபத்திற்கு ஆசைப்படல் : வாழ்வாதாரத்தைத் தேடுவதில் சிலர் குறுகிய காலத்தில் நிறைய பணம் சம்பாதிக்கத்தான் விரும்புகின்றனர். இது அவர்களை ஹராத்தைப் புசிக்கத் தூண்டுகின்றது.
٣
பேராசை மற்றும் தன்னிறைவு அடையாமை : மக்களில் சிலர் அல்லாஹ் தனக்கு பங்கீடு செய்துள்ள ஹலாலான வாழ்வாதாரத்தைப் பார்த்துத் திருப்திப் படாமல் அவன் ஹராமாக்கிய வழிகளிலேனும் அதிக சம்பாத்தியத்திற்கு முனைகின்றனர்.

ஹராமான சம்பாத்தியத்தின் தீங்குகள்

١
ஹராமான சம்பாத்தியம் அல்லாஹ்வின் கோபத்திற்கும், நரகிற்கும் வழிவகுக்கும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ உமாமா அல்ஹாரிஸீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: "யார் (பொய்ச்) சத்தியம் செய்து ஒரு முஸ்லிமின் உரிமையை அபகரித்துக்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைக் கட்டாயமாக்கி விட்டான்; சொர்க்கத்தை அவருக்குத் தடை செய்துவிட்டான்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அது ஒரு சிறிய பொருளாய் இருந்தாலுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "மிஸ்வாக் மரத்தின் ஒரு குச்சியாக அது இருந்தாலும் சரியே" என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம் 137).
٢
அல்லாஹ்வுக்கு வழிப்படுதலை விட்டும் உள்ளங்கள் இருளாகி, உறுப்புக்கள் சோர்வடைதல், வாழ்வாதாரம், வாழ்நாளில் இருந்து பரகத் களையப்படல்.
٣
பிரார்த்தனை ஏற்க்கப்படாமல் இருக்க ஹராமான சம்பாத்தியமும் ஒரு காரணமாகும். அபூ ஹுரைரா (ரலி) கூறினார்கள் : நபி (ஸல்) ஒரு மனிதரைப் பற்றி பின்வருமாறு கூறினார்கள் : "நீண்ட பிரயாணம் செய்து, புழுதி படர்ந்த ஆடையுடன், பரட்டை தலையுடன் ஒரு மனிதர் தனது இரு கரங்களையும் உயர்த்தி இறைவா, இறைவா என அழைக்கின்றார். அவரது உணவோ ஹராமானது, பானமோ ஹராமானது, உடையோ ஹராமானது, அதற்கு எவ்வாறு பதிலளிக்கப்படும்?" (முஸ்லிம் 1015).
٤
மக்களிடையே பகை, விரோதம் ஏற்பட்டு, சமூகம் சீரழிய வழிவகுக்கும். மக்களுடைய சொத்துகளில் அத்துமீறி, முறையற்ற விதத்தில் அபகரிப்பதன் முடிவு இதுவாகும். அல்லாஹ் கூறுகின்றான்: "நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி விடத்தான்" (மாஇதா : 91).

நிதிப் பரிவர்த்தனைகளில் தடை செய்யப்பட்ட வகைகள்

١
தடைசெய்யப்பட்ட பொருட்கள்
٢
தடைசெய்யப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள்

தடை செய்யப்பட்ட பொருட்கள்

இவை செத்தவை, இரத்தம், பன்றி இறைச்சி, மற்றும் மோசமான, அசுத்தமானவை போன்ற இயல்பிலேயே தடை செய்யப்பட்டவையாகும். இவை இயல்பிலேயே உள்ளம் அறுவறுக்கக் கூடியவையே. அல்லாஹ் கூறுகின்றான்: "(நபியே!) நீர் கூறும்: “தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை” - ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் - (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) - ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் - (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.(அன்ஆம்: 145).

கொடுக்கல் வாங்கலில் தடை செய்யப்பட்டவை:

இவை மக்களுக்கு அநீதியிழைக்கும், அவர்களின் சொத்துக்களை சுரண்டும் வட்டி, சூதாட்டம், மோசடி, ஏமாற்று, பதுக்கல் போன்ற மார்க்கத்திற்கு முரணான அனைத்து பரிவர்த்தனைகளுமாகும். ஆனால் இவ்வகையானது உள்ளம் ஆசைப் படக்கூடியவையே. இதனால்தான் அதைத் தடுக்கவும், அதில் வீழ்திடாதிருக்கவும் சட்டம், தண்டனை முறைகள் அவசியப்பட்டன. அல்லாஹ் கூறுகின்றான்: "நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்" (நிஸா : 10). மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: "ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)". (பகரா : 278, 279).

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்