கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் சுத்தம் என்ற பாடத்தில் சில சிறப்பு நிலைகள்

வுழூவின் போது பாதணி, சாக்ஸ்களை நீக்கி கல்களைக் கழுவ சிரமப்படுவோருக்கு இலகுபடுத்திக் கொடுக்கும் விதமாக இஸ்லாம் அவற்றின் மீது மஸ்ஹு செய்வதை அறிமுகப்படுத்தியுள்ளது, அதேபோன்று நீர் கிடைக்காத பட்சத்தில் தயம்மும் என்ற ஒரு முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பாடத்தில் சாக்ஸ்கள், மற்றும் காயங்களுக்குப் போடப்பட்டிருக்கும் கட்டுகளில் மஸ்ஹு செய்வது பற்றியும், தயம்மும் செய்யும் முறை பற்றியும் அறிவோம்.

  • சாக்ஸ்களின் மீது மஸ்ஹு செய்யும் சந்தர்ப்பங்களை அறிதல்.
  • காயக்கட்டுகளின் மீது மஸ்ஹு செய்யும் சந்தர்ப்பங்களை அறிதல்.
  • தயம்மும் பற்றிய அறிமுகம்.
  • தயம்மும் செய்யும் முறையை அறிதல்.
  • இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

    சாக்ஸ்கள் மீது மஸ்ஹு செய்தல்

    வுழூவிலே கால்களைக் கழுவுவதற்குப் பதிலாக கரண்டைக் கால் வரை மூடப்பட்ட பாதணி, அல்லது சாக்ஸின் மேல்பகுதியில் ஈரமான கையினால் மஸ்ஹு செய்ய ஒரு முஸ்லிமால் முடியுமென்பது இஸ்லாத்தின் தாராளத் தன்மையிலுள்ளதாகும்.

    எப்போது பாதணிகளில் மஸ்ஹு செய்யலாம்?

    (வுழூ அல்லது கடமையான குளிப்பு மூலம்) சுத்தமாக உள்ள நிலையில் ஒருவர் பாதணி அல்லது சாக்ஸ் அணிந்தால் அடுத்த வுழூவின் போது அவற்றில் மஸ்ஹு செய்யலாம்.

    சாக்ஸ்களில் மஸ்ஹு செய்வதற்கான கால எல்லை

    ஊரிலிருப்பவருக்கு ஒரு நாள் (24 மணித்தியாலங்கள்).
    பிரயாணிக்கு மூன்று நாட்கள் (72 மணித்தியாலங்கள்).

    வுழூவில் மாத்திரமே அவ்வாறு பாதணிகளில் மஸ்ஹு செய்யலாம். கடமையான குளிப்பின் போது கால்களை அவசியம் கழுவ வேண்டும்.

    பாதணி அணிந்ததன் பின் முதல் தடவை மஸ்ஹு செய்ததிலிருந்தே கால எல்லை ஆரம்பிக்கின்றது.

    காயக்கட்டுகளில் மஸ்ஹு செய்தல்

    முறிவு, காயம் ஏற்படும்போது வேகமாகக் குணமடையவோ, வவி குறையவோ வுழூவின் உறுப்புக்களில் போடப்படும் கட்டுக்களே இங்கு பேசப்படுகின்ற தலைப்பாகும்.

    வுழூவின் போதோ, கடமையான குளிப்பின் போதோ தேவையேற்படின் காயக்கட்டுகள் மீது ஈரமான கையினால் மஸ்ஹு செய்ய முடியும்.

    காயக்கட்டுகள் மீது எவ்வாறு மஸ்ஹு செய்வது?

    குறிப்பிட்ட உறுப்பில் வெளிப்பகுதிகளை நீரினால் கழுவிவிட்டு, காயக்கட்டினால் மூடப்பட்ட பகுதியில் அதன் மீது மஸ்ஹு செய்ய வேண்டும்.

    காயக்கட்டில் மஸ்ஹு செய்வதற்கான கால எல்லை

    மஸ்ஹு செய்யும் தேவையிருக்கும் காலமெல்லாம் எவ்வளவு காலமாயினும் சரி தொடர்ந்து மஸ்ஹு செய்யலாம். தேவை முடிந்ததும் கட்டுக்களை அவிழ்த்து அவ் உறுப்புக்களைக் கழுவ வேண்டும்.

    தண்ணீர் பயன்படுத்த முடியாதவர்கள்

    நோயின் காரணமாகவோ, தண்ணீரின்மையாலோ, அல்லாது பற்றாக்குறையாலோ வுழூ அல்லது குளிப்புக்காக ஒரு முஸ்லிமுக்குத் தண்ணீர் பயன்படுத்த முடியாவிட்டால் அது கிடைக்கும் வரை, அல்லது பயன்படுத்த இயலுமாகும்வரை மணலினால் தயம்மும் செய்ய முடியும்.

    தயம்மும் செய்யும் முறை

    தனது இரு கைகளாலும் மணில் ஒரு தடவை அடிக்க வேண்டும்.

    கையில் ஒட்டிய மணலால் முகத்தைத் தடவிக்கொள்ள வேண்டும்.

    இரு கைகளையும் மணிக்கட்டு வரை தடவிக்கொள்ளல்.

    உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


    பரீட்சையை ஆரம்பிக்கவும்