கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் வானவர்களை நம்புதல்

வானவர்களை நம்புதல் ஈமானின் தூண்களில் ஒன்றாகும். அவர்களின் யதார்த்தம், பண்புகள், சில பணிகள், அவர்களை நம்பிக்கை கொள்வதன் அர்த்தம் போன்றவற்றை இப்பாடத்தில் கற்போம்.

  • வானவர்களை  நம்பிக்கை கொள்வதன் அர்த்தம், அதன் முக்கியத்துவத்தை அறிதல்.
  • அவர்களுடைய சில பண்புகள், பணிகளை அறிதல்.
  • அவர்களை நம்பிக்கை கொள்வதால் கிடைக்கும் பலன்களை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

இந்தப் பாடத்தின் மொழிபெயர்ப்பு பின்வரும் மொழிகளில் கிடைக்கிறது:

வானவர்களை நம்புவதன் அர்த்தம்

வானவர்களின் இருப்பை ஆணித்தரமாக உண்மைப்படுத்துவதுடன், அவர்கள் மனு, ஜின் உலகங்களை விட்டும் வேறுபட்ட மறைவான உலகைச் சார்ந்தவர்கள் என நம்புதலாகும். அவர்கள் இறையச்சமுள்ள கண்ணியவான்கள். அல்லாஹ்வை உண்மையாக வணங்கக் கூடியவர்கள். அவன் ஏவியதை அமுல்படுத்துவார்கள். ஒருபோதும் அவனுக்கு மாறு செய்ய மாட்டார்கள். அல்லாஹ் கூறுகின்றான் : “மாறாக அவர்கள் கண்ணியமான அடியார்கள். எந்த வார்த்தை மூலம் அவர்கள் அவனை முந்திவிட மாட்டார்கள். அவனது கட்டளைப் படியே செயல்படுவார்கள்”. (அன்பியாஃ : 26, 27).

வானவர்களை நம்புவதன் முக்கியத்துவம்

இறைநம்பிக்கையின் ஆறு அம்சங்களில் வானவர்களை நம்புவதும் ஒன்றாகும். அல்லாஹ் கூறுகின்றான் : “(இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்” (பகரா : 285). நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கையைப் பற்றி : “நீர் அல்லாஹ்வையும், அவனது வானவர்கள், வேதங்கள், தூதர்கள், மறுமை நாளையும், விதியையும் நம்புவதாகும் என்றார்கள்”. (முஸ்லிம் : 08).

வானவர்களை நம்புவது அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாகும். அதனை மறுப்பவன் நெறிபிறழ்ந்து, வழி தவறிப்போகின்றான். அல்லாஹ் கூறுகின்றான் : “எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார்”. (நிஸா : 136). மேற்கண்ட விடயங்களை மறுத்தவனுக்கு இறைநிராகரிப்பாளன் எனப் பொதுவாகக் கூறியுள்ளான் .

வானம் அதிலுள்ளவர்களின் சுமையால் கனத்துவிட்டதாக நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள். அங்கு நிலையிலோ, ருகூஃவிலோ, ஸுஜூதிலோ ஒரு வானவர் அல்லாஹ்வை வணங்காமல் ஒரு சாண் அளவு கூட இடமில்லை.

வானவர்களை நம்புதவதன் உள்ளடக்கம் எவை?

١
அவர்களது இருப்பை நம்புதல், அவர்கள் யதார்த்தமாகவே இருக்கின்ற அல்லாஹ்வின் படைப்பினங்கள் என்பதை நாம் நம்ப வேண்டும்.
٢
ஜிப்ரீல் அலை போன்ற பெயர் அறிந்தவர்களை அவர்களது பெயர்களுடன் நம்புதல், நாம் பெயர் அறியாதவர்களைப் பொதுப்படையாக நம்புதல் .
٣
அவர்களில் நாம் அறிந்த பண்புகளையும் நம்புதல் .
٤
அல்லாஹ்வின் கட்டளைப் பிரகாரம் அவர்கள் மேற்கொள்ளும் பணிகளில் நாம் அறிந்தவற்றை நம்புதல்.

நாம் நம்பிக்கை கொள்ள வேண்டிய வானவர்களின் சில பண்புகள்

١
அவர்கள் மறைவான உலகத்தினர். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கும் படைப்பினங்கள். அவனின் பரிபாலனத் தன்மையிலோ, இறைமையிலோ எந்தப் பங்கும் அவர்களுக்கில்லை. மாறாக முழுமையாக அல்லாஹ்வுக்கு வழிப்படும் அவனது அடியார்கள். அல்லாஹ் கூறுகின்றான் : "அவன் அவர்களுக்கு ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். தாம் ஏவப்படுவதையே செய்வார்கள்". (தஹ்ரீம் : 6).
٢
அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "வானவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டனர்". (ஆதாரம் : முஸ்லிம் 2996).
٣
அவர்களுக்கு இறகுகள் உள்ளன. எண்ணிக்கையில் வேறுபட்ட இறகுகள் அவர்களுக்கு உள்ளதாக அல்லாஹ் கூறுகின்றான் : வானங்களையும், பூமியையும் படைத்து இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்வோராக ஆக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்; தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன். (பாதிர் : 1).

அல்லாஹ் வானவர்களுக்குப் பல பொறுப்புக்களை சாட்டியுள்ளான். அவற்றுள் சில :

١
அல்லாஹ்விடமிருந்து தூதர்களுக்கு இறைச்செய்திகளை எத்திவைத்தல். இதற்காக ஜிப்ரீல் (அலை) நியமிக்கப்பட்டுள்ளார்.
٢
உயிரைக் கைப்பற்றதல். இதற்காக மலகுல் மவ்தும், அவரது உதவியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
٣
அடியார்களின் நன்மை, தீமைகளைப் பதிந்து பாதுகாத்தல். அதற்காக கண்ணியமிக்க எழுத்தாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு மனிதன் விபத்திலிருந்து மயிரிழையில் உயிர்தப்புவதைப் பார்த்து நாம் பலதடவை வியக்கிரோம். அல்லாஹ்வின் கட்டளைப் பிரகாரம் மனிதர்களை ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பதும் வனவர்களின் பணிகளில் உள்ளது என்பதை நாம் மறந்துவிடலாகாது.

வானவர்களை நம்புவதால் விசுவாசியின் வாழ்வில் பல பாரிய பயன்பாடுகள் ஏற்படுகின்றன. அவற்றுள் சில :

١
அல்லாஹ்வின் மகத்துவம், ஆற்றல், சர்வ வல்லமை ஆகியவற்றை அறிந்து கொள்ளல். ஏனெனில் படைப்பின் பிரமாண்டம் படைப்பாளனின் மகத்துவத்தை எடுத்துக் காட்டக் கூடியதாகும். ஒளியிலிருந்து இறக்கைகளுள்ள வானவர்களை அல்லாஹ் படைத்துள்ளதைப் பார்த்து விசுவாசியிடம் அல்லாஹ்வைப் பற்றிய கண்ணியமும், மகத்துவமும் அதிகரிக்கின்றது.
٢
அல்லாஹ்வை வழிப்படுவதில் நிலைத்திருக்கச் செய்கின்றது. தனது செயல்களை வானவர்கள் பதிகின்றனர் என நம்பியவனிடம் அல்லாஹ்வின் அச்சம் ஏற்படுகின்றது. எனவே இரகசியமாகவோ, வெளிப்படையாகவோ அவனுக்கு மாறு செய்ய மாட்டான்.
٣
அழகான முறையிலும், பூரணமாகவும் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றக் கூடிய ஆயிரக்கணக்கான வானவர்கள் இவ்விரிவான பிரபஞ்சத்தில் அவனுடன் இருக்கின்றனர் என்பதை ஒரு விசுவாசி நம்பும் போது அல்லாஹ்வை வழிப்படுவதில் அவனிடம் பொறுமை ஏற்பட்டு, நிம்மதி, மகிழ்ச்சியை உணர்கின்றான்.
٤
மனிதர்களைப் பாதுகாப்பதற்காக வானவர்களை அல்லாஹ் நியமித்திருப்பதன் மூலம் அவர்களிடத்தில் அவன் கரிசனை கொண்டிருப்பதற்காக அவனுக்கு நன்றிசெலுத்துதல்.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்