கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகள்

பெற்றோருக்கு உபகாரம் புரிதல், அது தொடர்பான சிலவற்றை இப்பாடத்தில் கற்போம்.

  • இஸ்லாத்தில் பெற்றோரின் மகிமையை விளக்குதல்.
  • பெற்றோருக்கு உபகாரம் புரிவதைத் தூண்டுதல், துன்புறுத்துவதை எச்சரித்தல்.
  • பிள்ளைகள் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய பிரதான கடமைகளை அறியத்தரல்.
  • பெற்றோருடன் நடந்து கொள்ள வேண்டிய சில ஒழுக்கங்களை விளக்குதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

இஸ்லாத்தில் பெற்றோரின் மகிமை

இஸ்லாம் பெற்றோருக்கு அதிக கண்ணியமளித்துள்ளது. இஸ்லாத்தில் மிக முக்கிய ஏவலான அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதுடன் பெற்றோருக்கு உபகாரம் புரிவதை இணைத்துள்ளது, அல்லாஹ் கூறுகின்றான் : "அவனையன்றி நீங்கள் வேறு யாரையும் வணங்கக் கூடாதென்றும், பெற்றோருக்கு உபகாரம் புரியுமாறும் உமது இரட்சகன் உமக்குக் கட்டளையிட்டுள்ளான்". (இஸ்ரா : 23). ஏனெனில் அல்லாஹ்விற்கு அடுத்து பிள்ளைகளின் இருப்பிற்கு அவ்விருவருமே காரணமாகும். தமது பிள்ளைகளின் ஆறுதலுக்காகவும், அவர்களைப் பராமரித்து, கவனித்துக் கொள்ளவும் பெற்றோர்கள் எதிர்கொண்ட சிரமம், கஷ்டம், நோவினை, விழித்திருத்தல், குறைவான ஓய்வு, நிம்மதியின்மை போன்றவற்றுக்கு எந்தப் பிள்ளையாலும் பிரதி செய்யவோ, வெகுமதியளிக்கவோ முடியாது.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்காக செய்த, மற்றும் செய்து கொண்டிருக்கும் நல்ல முயற்சிகளுக்கு வெகுமதியாக அப்பிள்ளைகள் இவர்களுக்கு நிறைவேற்ற வேண்டிய சில கடமைகளை விதித்துள்ளது அல்லாஹ்வின் நீதத்திலுள்ளதாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும் படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்". (அன்கபூத் : 8). மேலும் கூறுகின்றான் : "இவ்வுலகில் அவர்களுடன் நல்ல முறையின் சேர்ந்திருங்கள்". (லுக்மான் : 15). நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்'' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்'' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்'' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை'' என்றார்கள். (புஹாரி 5971, முஸ்லிம் 2548).

பெற்றோருக்கு உபகாரம் புரிவதன் சிறப்பு

பெற்றோருக்கு உபகாரம் புரிவது பிள்ளைகள் மீதான கட்டாயக் கடமையாகும். அதிலே பாரிய, மகத்தான கூலிகளுண்டு. பெற்றோருக்கு உபகாரம் புரிவதில்தான் ஈருலகிலும் பல நன்மைகள் உண்டு, வாழ்வு வளமாகவும், வாழ்வாதாரம் பெருகவும், சுவனம் நுழையவும் அல்லாஹ்வின் அனுமதியின் பிரகாரம் அதுவே காரணமாகும். நபி (ஸல்) அவர்கள், "மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்" என்று கூறினார்கள். "யார் (மூக்கு), அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் (மூக்குத் தான்)" என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம் 2551).

பெற்றோருக்கு உபகாரம் புரிவது மிகச் சிறந்த அமல்களில் ஒன்றாகவும், அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்திற்குரியதாகவும் உள்ளது. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறுகின்றார் : "நான் நபி (ஸல்) அவர்களிடம், "(நற்)செயல்களில் சிறந்தது எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது" என்று பதிலளித்தார்கள். நான் "பிறகு எது?" என்று கேட்டேன். "தாய் தந்தையருக்கு நன்மை புரிவது" என்றார்கள். நான், "பிறகு எது?" என்று கேட்டேன். அதற்கு "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது" என்றார்கள்". (புஹாரி 527, முஸ்லிம் 85).

எனவே பெற்றோருக்கு உபகாரம் புரிவது ஸுன்னத்தான அறப்போரை விட சிறந்தது, ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், 'நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் (இருக்கிறார்கள்)'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு'' என்றார்கள். (புஹாரி 5972, முஸ்லிம் 2549).

பெற்றோரைத் துன்புறுத்துதல்

பெற்றோரைத் துன்புறுத்துதல் மிகப் பெரும் பாவங்களில் உள்ளதாகும். நபி (ஸல்) அவர்கள், "மிகப்பெரிய பாவம் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோரைத் துன்புறுத்துவதும்.." என்று கூறினார்கள். (புஹாரி 6919, முஸ்லிம் 87).

பிள்ளைகள் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகள்

١
சக்திக்குட்பட்ட விடயங்களில் அவ்விருவருடையவும் ஏவல்களுக்குக் கட்டுப்படல், அவர்கள் பாவத்தை ஏவினால் அதில் கட்டுப்பட முடியாது. ஏனெனில் படைத்தவனுக்கு மாறு செய்வதில் படைப்பினங்களுக்குக் கட்டுப்படுதல் இல்லை.
٢
எமது மார்க்கத்திற்கு இடையூறு விளைவித்தாலும் அவர்களுடன் நல்ல முறையில் சேர்ந்திருத்தல். இணைவைப்பு, நிரந்தர நரகத்தின்பால் அழைப்பு விடுப்பதைவிட பெரிய இடையூறு ஏதாவதுண்டா, அவ்வாறிந்தும் அல்லாஹ் : “நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்”. (லுக்மான் : 15). என்று கூறியுள்ளான்.
٣
அவர்கள் விடயத்தில் கவனமெடுத்து, உபகாரம் புரிதல். அவ்விருவரையும் நேசம் வைத்து, நற்குணத்துடனும், நல்லொழுக்கத்துடனும் பழகுவதுடன்,அனைத்து வித உபகாரம், சேவை, கட்டுப்படல் என்பவற்றினூடாகவே அது நிறைவேறும். அல்லாஹ் கூறுகின்றான் : "அவனையன்றி நீங்கள் வேறு யாரையும் வணங்கக் கூடாதென்றும், பெற்றோருக்கு உபகாரம் புரியுமாறும் உமது இரட்சகன் உமக்குக் கட்டளையிட்டுள்ளான்". (இஸ்ரா : 23).
٤
குறிப்பாக அவர்களது வயோதிபத்தில் சீ என்ற வார்த்தையாயினும் எந்த வித்திலும் அவர்களை நோவினைப்படுத்தி, துன்புறுத்தக் கூடாது. அல்லாஹ் கூறுகின்றான் : "அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!". (இஸ்ரா : 23).
٥
அவர்களுடன் பணிவாக நடந்து கொள்ளல். அல்லாஹ் கூறுகின்றான் : "இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!". (இஸ்ரா : 24).
٦
அவர்கள் எமக்குச் செய்த உபகாரங்களை நினைவுகூர்ந்து, எப்போதும் நன்றியுணர்வுடன் இருத்தல். அல்லாஹ் கூறுகின்றான் : “நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது”. (லுக்மான் : 14).
٧
நல்ல முறையில் அவர்களுக்கு செலவு செய்தல்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "நீயும், உனது சொத்தும் உனது தந்தைக்குரியனவே, உமது பிள்ளைகள் உமது சம்பாத்தியத்தில் மிகத் தூய்மையானவர்களாகும், எனவே உமது பிள்ளைகளின் சம்பாத்தியத்திலிருந்து நீங்கள் உண்ணுங்கள்". (அபூதாவூத் 3530).
٨
அவர்கள் வாழும்போதும், மரணித்த பின்னரும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்தல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1.நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை". (முஸ்லிம் 1631).
٩
அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அவர்களது நண்பர்களை மதித்து நடத்தல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "ஒரு பிள்ளை தனது தந்தையின் நண்பர்களுடன் உறவைப் பேணுவது தந்தைக்குச் செய்யும் பேருபகாரமாகும்". (முஸ்லிம் 2552).

பெற்றோருடன் பழகுவதில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒழுக்கங்கள்

١
அவர்கள் கூறுவதைக் காது தாழ்த்தி அழகாகச் செவிமடுத்தல். அத்தருணத்தில் கைப்பேசி போன்ற வேறு பராக்குகளில் ஈடுபடலாகாது.
٢
அவர்களது தேவைகளைக் கோரமுன் குறிப்பறிந்து நிறைவேற்ற விரைதல், அவர்களைப் பாதிக்கும் விடயங்கள் அர்களை நெருங்க முன் தடுத்து விடுதல்.
٣
அவர்களது அழைப்பிற்கு தாமதின்றி, உளப்பூர்வமாக, துரிதமாக பதிலளித்தல்.
٤
அவர்களிடமிருந்து சில தவறுகள் நிகழும் போது மென்மையாக, அறிவுபூர்வமாக உபதேசம் செய்தல்.
٥
பெற்றோரிடமிருந்து கொடுமை, அநீதிகள் நிகழ்ந்தால் அதனைப் பிள்ளைகள் பொறுமை, உபகாரம், மரியாதையுடன் எதிர்கொள்ளுதல்.
٦
பெற்றோருடன் பிடிவாதமாகவும் எதிர்ப்பாகவும் இருக்கக்கூடாது.
٧
அவர்கள் முன்னிலையில் அதிகமதிகம் புன்முறுவல் பூத்தல்.
٨
குடும்ப விவகாரங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்து, அவர்களது கருத்துக்களை மதித்தல்.
٩
அன்றாட வாழ்க்கையில் கூட- அவர்களுக்கு விருப்பமாக இருந்தால்- கதைத்து, உரையாடி, அவர்களை முதன்மைப்படுத்துதல்.
١٠
பிரயாணத்தின் காரணமாக பிரிய நேரிட்டால் எப்போதும் அவர்களுடன் தொடர்பு கொண்டு, நிலமைகளைக் கேட்டறிதல் அவசியமாகும்.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்