தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் விவாகரத்து
இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:
இஸ்லாம் குடும்ப வாழ்வைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்தியுள்ளது. அல்குர்ஆன் வர்ணித்துள்ள பிரகாரம் கடுமையான ஓர் ஒப்பந்தத்தின் மூலம் திருமண உறவைப் பாதுகாத்துள்ளது. இக்கடுமையான ஒப்பந்தம்தான் வலியுறுத்தப்பட்ட, பலப்படுத்தப்பட்ட திருமண ஒப்பந்தமாகும்.
திருமண உறவைப் பாதுகாப்பதை வலியுறுத்தும் வகையில், கணவர்கள் தங்கள் மனைவிகளை வெறுத்தாலும் அல்லது அவர்களிடமிருந்து சில விஷயங்களை வெறுத்தாலும், அவர்களை விவாகரத்து செய்யாமல் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது. அல்லாஹ் கூறுகின்றான் : "இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்". (நிஸா : 19). கடுமையான உடன்படிக்கை முறிவுக்குள்ளாகக் கூடாது என்பதற்காக, கணவனுக்கு எதிராக ஒரு பெண்ணைக் தூண்டுவதன் மூலம் வாழ்க்கைத் துணைவர்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதை இஸ்லாம் கடுமையாக எச்சரித்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார் : "ஒரு பெண்ணை அவளது கணவனுக்கெதிராக மோசடி செய்து, குழப்பிவிட்டவன் எம்மைச் சார்ந்தவனல்ல". (அபூதாவூத் 2175).
இஸ்லாத்தின் யதார்த்தவாதம்
இஸ்லாம் திருமண உறவின் தொடர்ச்சியில் ஆர்வமாக இருந்தாலும், மக்களின் உள்ளுணர்விற்கு எதிராக வராத, அவர்களின் ஆசைகளை அடிபணியச் செய்யாத அல்லது அவர்கள் மீது அழுத்தம் கொடுக்காத ஒரு யதார்த்தமான மதமாகும். மாறாக அது அவர்களது நிலமைகள், உணர்வுகள், தேவைகளைக் கவனத்திற் கொள்கின்றது. திருமண வாழ்க்கையைத் தொடர்வது பல சந்தர்ப்பங்களில் அதன் முறிவை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்பதை அல்லாஹ் அறிகின்றான், மேலும் விவாகரத்து சில சமயங்களில் தேவையாகவோ அல்லது அவசியமாகவோ இருக்கலாம் என்பதையும் அவன் அறிகின்றான். அதனால்தான், விவாகரத்தில் தீங்கு, தீவிரம் இருந்தாலும் அதற்கான அனுமதியில் பாரிய மதிநுட்பமுள்ளது.
விவாகரத்து சட்டபூர்வமாதல்
விவாகரத்து சட்டபூர்வமாவதை அறிவிக்கும் பல செய்திகள் அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும் இடம்பெற்றுள்ளன. விவாகரத்தின் சட்டங்களை ஒழுங்குபடுத்தி, நெறிமுறைகளை விளக்கி அல்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் இடம்பெற்றுள்ளன. அதன் பெயரில் ஓர் அத்தியாயம் கூட அல்குர்ஆனில் உள்ளது.
மொழி ரீதியில் தலாக் என்பது
முடிச்சை அவிழ்த்து விடுவிப்பதாகும்.
மார்க்க ரீதியில் தலாக் என்பது
உடனடியாகவோ, தாமதாகவோ அமுலாகும் விதத்தில் விவாகரத்தை அறிவிக்கக் கூடிய குறிப்பட்ட சில வார்த்தைகள் மூலம் திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்தல். குறிப்பிட்ட வார்த்தை என்பது "தலாக்" (விவாகரத்து) போன்ற வெளிப்படையான வார்த்தையாகவும் இருக்கலாம், அல்லது "பாஇன்" (பிரிதல்), "ஹராம்", "இத்லாக்" (விடுவித்தல்) போன்ற சிலேடையான வார்த்தைகளாகவும் இருக்கலாம். வார்த்தையின் இடத்தில் எழுத்து, குறிப்பு உணர்த்தும் செய்கை போன்றனவும் கணக்கில் கொள்ளப்படும். தலாக் என்ற வார்த்தையுடன் "குல்உ" என்ற வார்த்தை" நீதிபதியின் "பிரித்து விட்டேன்" என்ற வார்த்தை போன்றனவும் இணைக்கப்படும்.
விவாகரத்தின் பயன்பாடுகள் சில
விவாகரத்தின் தீமைகள்
விவாகரத்தின் வகைகள்
மீளத்தக்க விவாகரத்து
இது ஒரு கணவன் தனது மனைவியை முதலாவதாக அல்லது இரண்டாவதாக விவாகரத்துச் செய்து, அப்பெண் இத்தா (கருத்தரிக்காததை உறுதிப்படுத்த காத்திருக்கும் காலம்) அனுஷ்டிக்கும் காலத்தினுள் அவளது அனுமதியின்றியும், புதிய ஒப்பந்தத்திற்கான அவசியமின்றியும் மீட்டெடுக்கும் உரிமை கணவனுக்குள்ள விவாகரத்து முறையே மீளத்தக்க விவாகரத்தாகும்.
மீள முடியாத சிறிய பிரிவினை விவாகரத்து
இது முதலாவதாக அல்லது இரண்டாவதாக விவாகரத்துச் செய்து இத்தாவுடைய காலமும் நிறைவடைவதாகும். இங்கு புதிய ஒப்பந்தமின்றி மனைவியை மீட்டெடுக்க முடியாது.
மீள முடியாத பெரிய பிரிவினை விவாகரத்து
இது மூன்றாவதாக செய்யும் விவாகரத்தாகும். விவாகரத்துச் செய்யப்பட்ட தனது மனைவி வேறொரு திருமணம் செய்து அக்கணவன் இவளை முன்னேற்பாடுகள் ஏதுமின்றி விவாகரத்து செய்து அல்லது மரணித்ததன் பின் புதிய ஒப்பந்தம், புதிய மஹ்ர் மூலமே தவிர முதல் கணவனுக்கு இப்பெண்ணை மீட்டெடுக்கும் உரிமையில்லை.
மீள முடியுமான, சிறிய பிரிவினை, மற்றும் பெரிய பிரிவினை ஆகிய மூன்று விவாகரத்து முறைகள் தொடர்பான சட்டதிட்டங்கள் இஸ்லாமிய ஷரீஅத்தின் நற்பண்புகளின் தெளிவான வெளிப்பாடுகளைக் காட்டுகின்றன. விவாகரத்து ஓர் இறுதி முடிவல்ல. மீள முடியுமான மற்றும் சிறிய பிரிவினை விவாகரத்துக்களில் வாழ்க்கைத் துணைவர்கள் ஒவ்வொருவரும் பிரச்சினைகளின் அழுத்தத்திலிருந்து வெளிப்பட்டு, பின்விளைவுகளை மறுபரிசீலனை செய்யவும், கூர்ந்து நோக்கவும் ஒரு வாய்ப்பையும் போதுமான நேரத்தையும் பெறுகிறார்கள். அதேபோன்று பெரிய பிரிவினை மூலம் விவாகரத்தாகி, இரண்டாவது கணவனிடமிருந்தும் விவாகரத்தான பின்னரும் இரு தரப்பினரும் மீள முடியும் என்பதை உணர்ந்து, அது நல்ல முடிவென்பதையும் காணலாம். ஏன், உறுதியான மற்றும் பலமான அடித்தளத்தில் திருமண வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இந்த அனுபவம் பெரும்பாலும் காரணமாகின்றது.
இத்தா (காத்திருப்பு)
விவாகரத்து அல்லது மரணத்தின் மூலம் கணவனைப் பிரிந்த ஒரு பெண் மறுமணம் செய்யாமல் காத்திருக்குமாறு மார்க்கம் கடமையாக்கி, வரையறுத்த குறிப்பிட்ட காலத்திற்கே இத்தா எனப்படுகின்றது.
விவாகரத்துப் பெற்ற மனைவி தனது கணவரின் வீட்டிலேயே இத்தாக் காலத்தைக் கழிக்கலாம், அவளுக்கு செலவு செய்வது அக்கணவர் மீது கடமையாகும். அதேபோன்று இத்தா இருக்கும் பருவத்தில் அக்கணவர் மரணித்தில் குறித்த மனைவிக்கு சொத்துரிமையும் உண்டு. இத்தாக் காலத்தில் மறுமணத்திற்காக பேச்சுவார்த்தை நடத்துவது ஹராமாகும்.
இத்தா சட்டபூர்வமானதற்கான காரணம்
اختر مستوى الشرح المناسب لك
يحتوي الدرس الآن على طبقات اختيارية تساعدك على المراجعة السريعة أو التعمق دون مغادرة الدرس.
- الملخص: نظرة سريعة في نحو دقيقة.
- الأساسي: محتوى الدرس الأصلي وهو المسار المعتمد للتقدم.
- المتعمق: تفاصيل إضافية اختيارية عند توفرها.
تقدمك وإكمال الدرس يعتمدان دائما على صفحات المستوى الأساسي.