கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் இஸ்லாத்தில் பெண்ணுரிமை

இஸ்லாமிய மார்க்கத்தில் பெண்களுக்கான உரிமைகளை இப்பாடத்தில் கற்போம்.

  • இஸ்லாம் பெண்ணிற்கு வழங்கும் மதிப்பிற்கும் முன்னைய சமூகங்கள் செய்யும் அவமதிப்பிற்கும் இடையிலான வேறுபாட்டை விளக்குதல்
  • இருபாலருக்கும் இடையில் சமத்துவம் என்ற கருப்பொருளை இஸ்லாம் அனுகுவதில் உள்ள பொது விதியைத் தெளிவுபடுத்துதல்.
  • பல துறைகளிலும் இஸ்லாம் பொறுப்பேற்றுள்ள சில பெண்ணுரிமைகளைப் பட்டியலிடல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

பெண்கள் மீது இஸ்லாம் காட்டும் அக்கறை

தூய்மைமிக்க இந்த இஸ்லாமிய மார்க்கம் அதன் நேரான மற்றும், நுட்பமான வழிகாட்டல்கள் மூலம் முஸ்லிம் பெண்ணில் அக்கறை செலுத்தியுள்ளது. மேலும் அவளுடைய கௌரவத்தைப் பாதுகாத்துள்ளது, அவளுடைய கண்ணியத்தையும் மகிழ்ச்சியையும் அடைவதை உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் சந்தேகம், சலனம், தீமை மற்றும் மோசமனான நடத்தைகள் ஆகியவற்றிலிருந்து வெகு தொலைவில் அவளுக்கு வசதியான வாழ்க்கைக்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது. மேற்கண்ட அனைத்தும் அல்லாஹ் தனது அடியார்கள் மீது பொதுவாகவும், பெண்கள் மீது குறிப்பாகவும் கொண்ட பாரிய அருளிலுள்ளதாகும். இந்த அக்கறை பல வடிவங்களில் உள்ளன.

கண்ணியமும் உயர்ந்த இடமும்.

இஸ்லாம் பெண்களுக்கு அவர்களின் கண்ணியம், மனிதநேயம் மற்றும் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்கிறது. அவள் மகளாக, மனைவியாக எந்தத் தரத்தில் இருந்தாலும் அவளுக்குப் பொருத்தமான இடத்தை வழங்கியுள்ளது. அவளிடம் கருணை காட்டி, உபகாரம் செய்து, விஷேட கவனம் செலுத்துமாறு இஸ்லாம் பணித்துள்ளது. பெண்களைக் குறைத்து மதிப்பிட்டு, அவமானப்படுத்தி, இழிவாக்குவதில் பெரும் பங்களிப்பு செய்யக்கூடிய மத ரீதியான, சிந்தனா ரீதியான, சமூகவியல் சார்ந்த மோசமான மரபுகளை கடுமையாக எதிர்த்துள்ளது.

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "பெண்கள் விடயத்தில் அல்லாஹ் திருவசனங்களை இறக்கி, சொத்துப் பங்கீடுகளை செய்யும் வரை அறியாமைக் காலத்தில் நாங்கள் பெண்களை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை". (புஹாரி 4913, முஸ்லிம் 1479). 1400 வருடங்களுக்கு முன் இஸ்லாம் எனும் ஜோதி உதித்து, பெண்களை உயர்த்தி, பல சமூகங்கள், கோத்திரங்கள் அவர்களுக்கு செய்து வந்த பல அநீதிகளை நீக்கியது. பெண்ணிற்கு சொத்துரிமையோ, அனந்தரம் பெறும் உரிமையோ இருக்கவில்லை. கணவன் மரணித்தால் மனைவி அனந்தரமாக்கப்படுவாள், அல்லது அவருடன் உடன்கட்டை ஏறுவாள். அத்துடன் விற்பனைப் பொருளாகவும் இருந்தாள். -உதாரணத்திற்காக இங்கிலாந்தில்- இந்த வழக்கம் இருபதாம் நூற்றாண்டு ஆரம்பம் வரை இருந்துள்ளது.

ஆண், பெண்களுக்கு மத்தியில் சமத்துவம்

இஸ்லாம் அகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிக்கும் ஞானமுள்ள, நீதமான அனைத்தையும் அறிந்த அல்லாஹ்வின் மார்க்கமாகும். மாறுபட்ட இரண்டை சமனாக்காமலிருப்பதும், ஒத்த இரண்டிற்கிடையில் பிரிக்காமலிருப்பதும் அல்லாஹ்வின் நீதம், மதிநுட்பத்திலுள்ளதாகும். இதனால்தான் இஸ்லாமிய ஷரீஅத் சட்டம் ஆண், பெண் இரு பாலரும் ஒத்துப்போகும் விடயத்தில் சமப்படுத்தியும், வேறுபடும் விடயத்தில் பிரித்தும் வைத்துள்ளதைக் காண்கிறோம். உரிமைகள், கடமைகள் அனைத்தையும் அவரவர்களின் இயல்பு, தேவைகள், திறன்கள் மற்றும் எல்லாம் வல்ல இறைவன் உருவாக்கிய இயற்கை சுபாவத்திற்கு ஏற்பவே அமைத்துள்ளது. இஸ்லாம் பெண்ணிற்கு அனைத்துத் துறைகளிலும் பொருத்துமான இடத்தையே வழங்கியுள்ளது. பல துறைகளில் அவளுக்கும் ஆணிற்கும் மத்தியில் சமத்துவத்தையே பேணியுள்ளது. அவற்றுள் சில :

படைப்பின் அடிப்படை

முந்தைய சமூகங்களின் பெண்களின் அவமதிப்பு அவர்களை மனித பிறவிக்கு அப்பால் தள்ளும் அளவிற்குச் சென்று விட்டது. பெண் ஒரு அபூரண மனிதன், இயற்கை அவளை படைப்பின் ஏணியின் அடிப்பகுதியில் விட்டுச் சென்றுவிட்டது என அரிஸ்டோ கூறுகின்றான். ஷாக்ரடீஸோ அவளை விசஷமூட்டப்பட்ட மரத்திற்கு ஒப்பாக்கின்றான். ரோம் நகரில் “கிரேட் ரோம்” என்ற பெரிய மாநாடுன்று நடைபெற்றது, அதில் பெண்கள் ஆன்மா அல்லது அழியாதவர்கள் என்று முடிவு செய்தனர். அத்துடன் அவளுக்கு மறுமை வாழ்க்கையில்லை, அவள் அசுத்தமானவள், மாமிசம் உண்ணக்கூடாது, சிரிக்கவோ, கதைக்கவோ கூடாது எனவும் முடிவு செய்தனர். பிரான்ஸியரோ கி.பி. 586ம் ஆண்டு ஒரு முக்கிய விவகாரத்தை அலசுவதற்காக மாநாடொன்றை ஏற்பாடு செய்தார்கள். அது என்னவெனில், பெண் மனிதப்பிறவியா? இல்லையா?, அவளுக்கு ஆன்மா உண்டா? இல்லையா?, அவ்வாறு இருந்தால் அது மனித ஆன்மாவா? அல்லது விலங்கின ஆன்மாவா?, மனித ஆவியாக இருந்தால் அது ஆடவரின் ஆன்மாத் தரத்திலுள்ளதா? அல்லது அதை விடத் தாழ்ந்ததா? என்பதே இதன் தலைப்பு. இறுதியில் அவள் மனிதப்பிறவிதான், இருப்பினும் ஆடவருக்குச் சேவை செய்ய மாத்திரமே அவள் படைக்கப்பட்டுள்ளாள் என்ற முடிவுக்கு வந்தார்கள். இஸ்லாத்திலோ சமத்துவத்தின் அடிப்படை படைப்பின் ஆரம்பத்திலிருந்தே உள்ளது. அல்லாஹ் கூறுகின்றான் : "மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்". (நிஸா : 01).

மத சமத்துவம்

மார்க்க சட்டதிட்டங்களைக் கட்டாயப்படுத்துவதிலும், அதனையொட்டி ஈருலகிலும் வழங்கப்படும் நன்மை, கூலிகளிலும் இஸ்லாம் ஆண், பெண்ணுக்கு மத்தியில் சமப்படுத்தியுள்ளது. அல்லாஹ் கூறுகின்றான் : "ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்". (நஹ்ல் : 97). மேலும் கூறுகின்றான் : "ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்". (நிஸா : 124). நபி (ஸல்) அவர்களிடம், விந்து வெளிப்பட்டதாக ஒருவருக்கு நினைவில்லை, ஆனால் ஈரத்தைக் காண்கிறார் என வினவப்பட்ட போது "அவர் குளிக்க வேண்டும்" என்றார்கள். விந்து வெளிப்பட்டதாக நினைவுள்ளது, ஆனால் ஈரத்தைக் காணவில்லை என வினவப்ட்ட போது "அவருக்குக் குளிப்புக் கடமையில்லை" எனக் கூறினார்கள். அப்போது உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், பெண்ணும் அவ்வாறு கண்டால் குளிக்க வேண்டுமா? எனக் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் "இவ்விடயத்தில் பெண்களும் ஆண்களை ஒத்தவர்கள்தான்" என பதிலளித்தார்கள். (அபூதாவூத் 236).

நபி (ஸல்) அவர்களது இத்தூதுத்துவத்தை முதன் முதலில் ஏற்றதும் கதீஜா (ரலி) என்ற ஒரு பெண்தான். எத்யோப்பியாவிற்கு முஸ்லிம்கள் மேற்கொண்ட முதல் ஹிஜ்ரத் பயணத்திலும் பெண்கள் கலந்திருந்தனர். அகபா எனும் இடத்தில் இஸ்லாத்திற்காக செய்த முதல் உடன்படிக்கையிலும் பெண்கள் கலந்திருந்தனர். அவர்களிடமிருந்தும் நபியவர்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவதற்காக உறுதி எடுத்தார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில், பெண்கள் தங்கள் நல்ல குணங்கள் மற்றும் அறிவின் மிகுதி, இஸ்லாத்தை விளங்குதல் போன்றவற்றால் அறியப்பட்ட பல உதாரணங்களைப் பதிவுசெய்துள்ளனர். ஏன் பல சந்தர்ப்பங்களில் இத்துறையில் முன்னோடியாகவே அவர்கள் திகழ்ந்துள்ளனர். அறிவியல் மற்றும் கல்வியில் பெண் முன்னோடிகள் பலரிடமிருந்து முஸ்லிம்கள் தங்கள் மதத்தின் பல விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளனர். அவர்களில் அன்னை ஆஇஷா (ரலி) குறிப்பிடத்தக்கவர்கள்.

ஐவேளைத் தொழுகைகள், இரு பெருநாள் தொழுகைகள், ஜும்ஆத் தொழுகை, மழை தேடித் தொழும் தொழுகை, ஹஜ், உம்ரா போன்ற கடமையான, ஸுன்னத்தான, ஆகுமான கூட்டுவணக்கங்களில் ஆண்களுடன் பெண்களும் பங்கெடுக்கின்றனர்.ஆண்களைப் போன்றே இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுத்தல், நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் போன்ற மார்க்க சட்டங்களில் இரு பாலரையும் சமப்படுத்தும் இன்னோரன்ன விடயங்கள் அவளுக்கும் ஏவப்பட்டுள்ளன. இருபலாருக்கும் படைப்பின் அடிப்படையிலுள்ள வேறுபாட்டுடன் தொடர்புடைய விடயங்கள் மாத்திரம்தான் விதிவிலக்களிக்கப்படும்.

இருப்பினும், இஸ்லாம், சமத்துவக் கொள்கையை ஒரு பொது விதியாக அங்கீகரித்தாலும், ஆண், பெண் இரு பாலரினது இயல்பையும் கவனித்துள்ளது. இந்த பணிகளை ஒழுங்கமைத்து ஒவ்வொரு நபரையும் சரியான இடத்தில் வைத்த பிறகு வாழ்க்கையில் ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கும் பணிகளில் மாறுபாட்டை உருவாக்குகிறது. எனவே குடும்பத்தில் ஆண் அதன் பொறுப்பையும், அதற்காக செலவளித்தல், பாதுகாத்தல், நிர்வகித்தல் போன்றவற்றின் பொறுப்பையும் சுமக்கின்றான். அதே போன்று பெண்ணும் தனது வீடு, கணவன், பிள்ளைகள் விடயத்தில் பொறுப்பாளியாகவும், அவளிடம் வேண்டப்படும் பொறுப்புகளைச் சுமக்கக் கூடியவளாகவும் இருக்கின்றாள்.

இஸ்லாம் பெண்களுக்கு முழு சிவில் மற்றும் சமூக உரிமைகளையும், தனிப்பட்ட மற்றும் அரசியல் அந்தஸ்தையும் உறுதி செய்கிறது. இவை இஸ்லாத்தின் தொடக்கத்தில் இருந்து 1400 வருடங்களுக்கு முன்னால், சிவில் கொள்கைகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கோஷம் விடுவதற்கு முன்னாலே பெண்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளாகும்.

சிவில் மற்றும் சமூகவியல் பெண்ணுரிமைகள்

١
கற்றல், கற்பித்தல் உரிமை : இஸ்லாம் முதலில் இருந்தே ஆண், பெண் இரு பாலருக்கும் சரி சமமாகவே கல்வியை ஊக்குவித்துக் கொண்டே இருக்கின்றது.
٢
தொழில், பணியில் பெண்ணுரிமை : ஆண் தொழில் புரிந்து, அவன் செலவு செய்வதுதான் அடிப்படையாகும். இருப்பினும் தேவையேற்படும் போது இஸ்லாத்தின் அடிப்படைகள், நெறிமுறைகளுக்கு உடன்படும் போது அதனைத் தடுக்கும் எந்தவொரு சட்டங்களும் இஸ்லாத்தில் இல்லை.
٣
சொத்துப் பங்கீட்டில் பெண்ணுரிமை : அல்குர்ஆன், ஸுன்னா, மார்க்க சட்ட நூல்கள் அனைத்திலும் ஆண், பெண்களுக்கான பங்கீட்டு முறைகள் பல வடிவங்களில் இடம்பெற்றுள்ளன.
٤
பெண்களின் சொத்துரிமை : அவள் சம்பாதிப்பது அல்லது அனந்தரமாகப் பெறுவதை உடந்தையாக்கிக் கொள்ளும் முழு உரிமை அவளுக்குண்டு. தனது சொத்தில் கொடுக்கல், வாங்கல் செய்ய முழு சுதந்திரம் அவளுக்குண்டு. அவளுக்கு சொந்த நிதிப் பொறுப்புள்ளது. அதில் தந்தை, கணவர் யாரையும் அவள் துயரத் தேவையில்லை.

தனிப்பட்ட நிலை மற்றும் திருமணத்தில் பெண்களின் உரிமைகள்

١
நல்ல கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், தன்னைத் திருமணம் பேசி வருபவரை ஏற்க மறுக்கும் உரிமையும் அவளுக்குண்டு.
٢
மஹர்த் தொகையை நிர்ணயிக்கும் உரிமை
٣
நிதிக் கவனிப்பு, மற்றும் தனக்கும், தனது பிள்ளைகளுக்கும் செலவு செய்யும் உரிமை
٤
கணவன் தன்னுடன் கனிவாக நடந்து கொள்ளல், சொல், செயலால் அழகிய முறையில் பழகுதல் போன்றவற்றில் மனைவிக்குள்ள உரிமை
٥
கணவன் பலதாரமணம் செய்யும் போது நீதமான சமத்துவத்தைப் பெறும் உரிமை
٦
நிதி சுதந்திரத்திற்கான அவளது உரிமை, மற்றும் கணவனிடமிருந்து சுயாதீனமான நிதி பொறுப்பு
٧
விவாகரத்துக் கோரல், நிபந்தனைகளுக்கு உட்படும் போது அதனைப் பெற்றுக் கொள்ளும் உரிமை.
٨
விவாகரத்திற்குப் பின் மறுமணம் செய்யாமலிருக்கும் வரை குழந்தைகளைப் பராமமரிக்கும் உரிமை.

ஏற்கனவே சொல்லப்பட்டதெல்லாம் இஸ்லாத்தில் பெண்ணுரிமைகளுக்கான வெறும் ஒரு சில எடுத்துக்காட்டுகளே. இல்லாவிடில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் அதிகமதிகம் உள்ளன.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்