கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் ஜனாஸாவைக் குளிப்பாட்டுதல், மற்றும் கபனிடுதல்

இஸ்லாமிய ஷரீஅத் ஒரு முஸ்லிம் வாழும் போது அவனை கண்ணியப்படுத்தியது போன்று மரணித்த பின்பும் கண்ணியப்படுத்தியுள்ளது. ஒரு ஜனாஸாவைக் குளிப்பாட்டி, கபனிடுவது பற்றிய சில சட்டங்களை இப்பாடத்தில் கற்போம்.

  • ஒரு முஸ்லிம் மரணித்ததும் செய்ய வேண்டிய ஸுன்னாக்களை அறிதல்.
  • ஜனாஸாக் குளிப்பாட்டும் முறையை அறிதல்.
  • கபனிடுவதன் சில சட்டங்களை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

ஒரு முஸ்லிம் மரணித்தால் செய்ய வேண்டிய காரியங்கள்

உயிர் உடலை விட்டும் பிரிந்து மரணம் உறுதியாகி விட்டால் பல விடயங்கள் அந்த ஜனாஸாவுக்குச் செய்வது மார்க்கத்தில் வலியுறுத்தப்படுகின்றது.

1. அந்த மைய்யித்தை கண்ணியபடுத்தும் விதத்தில் அதனுடைய இரு கண்களையும் மென்மையாக கசக்கி மூடி விட வேண்டும்.

அபூ ஸலமா (ரலி) அவர்கள் மரணித்த வேளை அவர்களுடைய பார்வை அன்னாந்திருக்கும் நிலையில் நபியவர்கள் நுழைந்த போது இரு கண்களையும் கசக்கி மூடி விட்டார்கள். மேலும் கூறினார்கள் : "மரணித்தவரிடத்தில் நீங்கள் சென்றால் அவருடைய கண்ணை கசக்கி மூடி விடுங்கள்". (இப்னுமாஜா 1455).

2. மனதைக் கட்டுப்படுத்தி பொறுமையாக இருத்தல்.

மனதுக்குக் கட்டுப்பட்டு குரலுயர்த்தி ஒப்பாரி வைக்காமல் மைய்யித்தின் குடும்பத்தார் உறவினர்களையும் பொறுமையாக இருக்க வைத்தல். நபி (ஸல்) அவர்கள் தனது பெண்பிள்ளை ஒருவருடைய சிறு குழந்தை மரணித்த போது பொறுமை செய்து நன்மையை எதிர்பார்த்திருக்குமாறு ஏவினார்கள். (புஹாரி 1284, முஸ்லிம் 923).

3. அந்த மைய்யித்திற்கு அல்லாஹ்வின் கருணை, மன்னிப்பு கிடைக்க வேண்டுமெனவும், அவரின் குடும்பத்திற்கு பொறுமை செய்யும் பாக்கியம் கிடைக்க வேண்டுமெனவும் பிரார்த்தித்தல்.

அபூ ஸலமா ரலி என்ற நபித்தோழர் மரணித்த போது நபி ஸல் அவர்கள் அவ்வாறுதான் நடந்து கொண்டார்கள். அன்னார் கூறினார்கள் : "உயிர் கைப்பற்றப்படும்போது பார்வை அதைப் பின்தொடர்கிறது" என்று கூறினார்கள். பின்பு, "இறைவா! அபூஸலமாவை மன்னிப்பாயாக! நல்வழி பெற்றவர்களிடையே அவரது தகுதியை உயர்த்துவாயாக! அவருக்குப் பிறகு எஞ்சியிருப்போருக்கு அவரைவிடச் சிறந்த துணையை வழங்குவாயாக! அகிலத்தின் அதிபதியே! எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு அருள்வாயாக! அவரது மண்ணறையை (கப்று) விசாலமாக்குவாயாக! அதில் அவருக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். (முஸ்லிம் 920).

4. மைய்யித்திற்குரிய இறுதிச் சடங்குகளை துரிதப்படுத்துதல்

அதனைக் குளிப்பாட்டி, தொழுகை நடத்தி, அதனை அடக்கம் செய்யும் பணிகளை துரிதப்படுத்துதல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "ஜனாஸாவைத் துரிதமாகக் கொண்டுசெல்லுங்கள். ஏனெனில், அது நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் (அதற்கான) நன்மையின் பக்கம் அதை விரைவுபடுத்துகிறீர்கள். வேறு விதமாக அது இருந்தால், ஒரு தீங்கை உங்கள் தோள்களிலிருந்து (விரைவாக) இறக்கி வைக்கிறீர்கள்". (புஹாரி 1315, முஸ்லிம் 944).

5. மைய்யித்தின் குடும்பத்தாருக்கு உதவுதல்.

அவர்களது சில சுமைகளை இலகுபடுத்தி உதவி செய்தல். நபி (ஸல்) அவர்கள் தனது சிறிய தந்தையின் புதல்வர் ஜஃபர் (ரலி) அவர்கள் போரில் உயிர்த்தியாகம் செய்த நேரத்தில் : "ஜஃபரின் குடும்பத்தாருக்கு உணவு சமைத்துக் கொடுங்கள், ஏனெனில் அவர்களை கவலைப் படுத்தும் விடயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது" எனக் கூறினார்கள். (அபூதாவூத் 3132, திர்மிதி 998, - அவர்கள் இதனை ஸஹீஹ் எனக் கூறியுள்ளார்கள் -, இப்னுமாஜா 1610).

மைய்யித்தைக் குளிப்பாட்டுதல்

மைத்தைக் கபனிட்டு, அடக்கம் செய்ய முன் அதனைக் குளிப்பாட்டுவது அவசியமாகும். அப்பணியை அவருடைய குடும்பத்தார், உறவினர்கள் அல்லது பிற முஸ்லிம்களில் ஒருவர் மேற்கொள்ள வேண்டும். இயல்பிலே தூய்மையான, பிறரைத் தூய்மைப்படுத்த வந்த நபியவர்கள் கூட மரணித்த போது குளிப்பாட்டப்பட்டார்கள்.

குளிப்பாட்டும் முறை :

முழு உடலிலும் தண்ணீர் படுமளவு குளிப்பாட்டினால் போதுமானதாகும். அதில் அசுத்தங்கள் ஏதும் இருந்தால் நீக்கி விட வேண்டும். அத்துடன் மைய்யித்தின் அவ்ரத் (மறைவிடம்) பாதுகாக்கப்பட வேண்டும். பின்வரும் விடயங்கள் குளிப்பாட்டும் போது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் :

1. மைய்யித்தின் ஆடைகளைக் களைந்த பின் அதன் தொப்புள் - முழங்காலுக்கு இடைப்பட்ட பகுதி மறைக்கப்பட வேண்டும்.

2. மையித்தின் மறைவிடத்தைக் கழுவும் போது கையில் ஒரு துணி, அல்லது கையுறை அணிந்து கொள்ள வேண்டும்.

3. மைய்யித்திலுள்ள அசுத்தங்களை முதலில் நீக்க வேண்டும்.

4. பின் வழமையான ஒழுங்கு முறையில் வுழூவின் உறுப்புக்களைக் கழுவிவிடுதல்.

5. பின் தலையையும், உடலின் ஏனைய பகுதிகளையும் கழுவ வேண்டும். இழந்தையிலை, அல்லது சவர்க்காரத்தை நீருடன் கலந்து ஊற்ற வேண்டும்.

6. முதலில் வலது புறமும், பின்னர் இடது புறமும் கழுவுவது விரும்பத்தக்கதாகும்.

7. மூன்று தடவைகள் அல்லது தேவையேற்படும் பட்சத்தில் அதற்கதிகமாகவும் கழுவுவது விரும்பத்தக்கது.

நபி (ஸல்) அவர்கள் தனது புதல்வி ஸைனப் (ரலி) அவர்களைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த பெண்களிடம் : "மூன்று, அல்லது ஐந்து, அல்லது தேவையெனக் கருதினால் அதற்கதிகமான தடவைகள் அவரை குளிப்பாட்டுங்கள்" எனக் கூறினார்கள். (புஹாரி 1253, முஸ்லிம் 939).

8. துணி, பஞ்சு போன்றதையும் வைக்கலாம்.

முன், பின் துவாரங்கள், இரு காதுகள், மூக்கு, வாய் போன்ற உறுப்புக்களிலிருந்து கழிவு, இரத்தம் போன்றவை வெளிப்படாமலிருக்கு துணி, பஞ்சு போன்றவற்றை வைக்கலாம்.

9. மைய்யித்திற்கு நறுமணம் பூசுவது ஸுன்னத்தாகும்.

குளிப்பாட்டும் போதும், குளிப்பாட்டி முடிந்ததும் நறுமணம் பூசுவது ஸுன்னத்தாகும். நபி (ஸல்) அவர்கள் தனது புதல்வி ஸைனப் (ரலி) அவர்களைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த பெண்களிடம் இறுதித் தடவையில் கற்பூரம் என்ற வாசனப் பொருளை சேர்த்துக் கொள்ளுமாறு பணித்தார்கள். (புஹாரி 1253, முஸ்லிம் 939).

யார் குளிப்பாட்டுவது?

١
குறிப்பிட்ட ஒரு நபருக்கு மரணித்தவர் வஸிய்யத் செய்திருந்தால் அவரது வஸிய்யத் நிறைவேற்றப்படும்.
٢
ஏழு வயதுக்குக் குறைந்த ஆண், பெண் பிள்ளைகள், இவர்களை ஆண், பெண் இருபாலரும் குளிப்பாட்டலாம். எனினும் ஆண் பிள்ளையை ஆண்களும், பெண் பிள்ளையை பெண்களும் குளிப்பாட்டுவது சிறந்தது.
٣
ஏழு வயதைத் தாண்டிய மைய்யித்தாக இருந்தால் ஆணை ஆண்களும், பெண்ணை பெண்களும்தான் குளிப்பாட்ட வேண்டும்.
٤
கணவன் மனைவியருள் ஒருவர் மற்றவரைக் குளிப்பாட்டலாம். அலி (ரலி) அவர்கள் தனது மனைவி பாத்திமா (ரலி) அவர்களைக் குளிப்பாட்டினார்கள்.

(கணவன் மனைவியருள் ஒருவர் மற்றவரைக் குளிப்பாட்டலாம் என) நான் இப்போது அறிந்ததை முன்கூட்டியே அறிந்திருந்தால் நபி ஸல் அவர்களை அவர்களது மனைவியர்தாம் குளிப்பாட்டியிருப்பர் என ஆஇஷா (ரலி) அவர்கள் கூறனார்கள். (அபூதாவூத் 3141, இப்னுமாஜா 1464).

மைய்யித்தைக் கபனிடுதல்

மைய்யித்தை முழுமையாக மறைக்கும் விதத்தில் கபனிடுவது அவரது குடும்பத்தார், முஸ்லிம்கள் அவருக்குச் செய்ய வேண்டிய உரிமையாகும். இது ஒரு சமூகக் கடமையும் கூட. நபி (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள் : "நீங்கள் வெள்ளை ஆடையையே அணியுங்கள். ஏனெனில் அது ‎தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். உங்களில் இறந்தோரை ‎அதிலேயே கஃபனிடுங்கள்". (அபூதாவூத் 3878.)

கபனுக்குரிய செலவினத்தை மைய்யித் விட்டுச் சென்ற சொத்திலிருந்து பெறப்படும். அவரிடம் சொத்தில்லையெனில் அவரது தந்தை, பாட்டன், பிள்ளை, பேரப்பிள்ளை போன்று அவருக்கு செலவு செய்யும் பொறுப்பிலுள்ள ஒருவர் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். அவர்களுக்கும் முடியா விட்டால் முஸ்லிம் செல்வந்தர்கள் மீது அது கடமையாகி விடும்.

கபனிடுவதில் கடமையானளவு ஆணோ, பெண்ணோ முழு உடலையும் மறைக்குமளது தூய்மையான ஆடையிருந்தால் போதுமானது.

கபனிடுவதில் ஸுன்னத்தான விடயங்கள்

١
ஆண் மைய்யித் நபி ஸல் அவர்களுக்குக் கபனிடப்பட்டது போன்று மூன்று வெண்ணிறத் துணிகளால் கபனிட வேண்டும். பெண் மைய்யித்தை கூடுதலாக மறைப்பதற்காக ஐந்து துணிகளைப் பயன்படுத்துவது விரும்பத்தக்கது.
٢
முடியுமாயிருந்தால் கபன் துணி வெள்ளை நிறமாக இருப்பது விரும்பத்தக்கது. நபி (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள் நீங்கள் வெள்ளை ஆடையையே அணியுங்கள். ஏனெனில் அது ‎தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். உங்களில் இறந்தோரை ‎அதிலேயே கஃபனிடுங்கள்.‎ (அபூதாவூத் 3878, திர்மிதி 994- அவர்கள் இதனை ஸஹீஹ் எனக் கூறியுள்ளார்கள் -, இப்னுமாஜா 3566.)
٣
அனுமதிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் மூலம் கபன் துணிக்கு நறுமணம் பூசுவது விரும்பத்தக்கது.
٤
கபன் துணியை சிறந்த முறையில் பலமாக சுற்றி, மைய்யித்தின் தலை, மற்றும் கால் பகுதிகளில் முடிச்சுகள் பலமாகப் போடப்படல் வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "உங்களில் ஒருவர் தமது சகோதரருக்குக் கஃபன் இட்டால் அதை ‎அழகுறச் செய்யட்டும்" . ‎(முஸ்லிம் 943.)

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்