கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் முஹம்மத் (ஸல்) அவர்களின் வரலாறு

இந்த பாடம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், மற்றும் அவரது வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நபி (ஸல்) அவர்களைப் பொதுப்படையாக அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

நபி வரலாறு

ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் சகல சந்தர்ப்பங்களிலும் நபி ஸல் அவர்களைப் பின்பற்றுவவதற்காக அன்னாரது வரலாற்றை விரிவாகப் படிப்பது அவசியமாகும். அவருடைய வாழ்க்கை வரலாறு இஸ்லாம் மற்றும் அதன் சட்டத்தின் விதிகளை அமுல்படுத்துவதாக இருந்தது. அல்லாஹ் கூறுகின்றான் : “அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது". (அஹ்ஸாப் : 21).

1. நபி (ஸல்) அவர்களின் வம்சம்

நபி (ஸல்) அவர்களது வம்சம்தான் சிறந்த, கௌரவமான வம்சமாகும். அவரது வம்சம் பின்வருமாறு : முஹம்மது (ஸல்) இப்னு அப்துல்லாஹ் இப்னு அப்துல் முத்தலிப் இப்னு ஹாஷிம் இப்னு அப்து மனாஃப் இப்னு குஸய்ம் இப்னு கிலாப் இப்னு முர்ரா இப்னு கஅப் இப்னு லுஅய் இப்னு காலிப் இப்னு ஃபிஹ்ர் இப்னு மாலிக் இப்னு நழ்ர் இப்னு கினானா இப்னு குஸைமா இப்னு முத்ரிகா இப்னு இல்யாஸ் இப்னு முழர் இப்னு நிஸார் இப்னு முஅத்து இப்னு அத்னான். அத்னான் என்பவர் இஸ்மாஈல் (அலை) அவர்களுடைய வம்சத்தில் வந்தவராவார்.

2. நபி (ஸல்) அவர்களது பெற்றோர்

அன்னாரது தந்தை : அப்துல்லாஹ் இப்னு அப்துல் முத்தலிப் இப்னு ஹாஷிம், தனது தாயின் கருவறையில் சிசுவாக இருக்கும் போதே தந்தை இறந்து விட்டார்கள். அன்னாரது தாய் : ஆமினா பின்து வஹ்ப் இப்னு அப்தி மனாப் இப்னு ஸுஹ்ரா.

3. நபி (ஸல்) அவர்களது பிறப்பு

ஆனை வருடம் ரபீஉல் அவ்வல் மாதம் ஒரு திங்கட்கிழமை அன்னார் பிறந்தார்கள்.

4. நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டுதல்

அபூ லஹபின் அடிமை ஸுவைபா சில தினங்கள் அன்னாருக்குப் பாலூட்டினார். பின்னர் பனூ ஸஃத் கோத்திரத்திலிருந்து பாலூட்டுவதற்காக ஹலீமா அஸ்ஸஃதிய்யா என்ற செவிலித் தாய் அழைக்கப்பட்டார். அவ்வம்மையாரிடம் சுமார் நான்கு வருடங்கள் தரித்திருந்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்களது இதயம் பிளக்கப்பட்டு, அதிலிருந்து ஷைத்தானின் பங்கு அப்புறப்படுத்தப்பட்டது, உடனே ஹலீமா அன்னாரைத் தாயாரிடம் ஒப்படைத்து விட்டார்கள்.

5. இளமைப்பருவம் மற்றும் வாலிபம்

١
பனூ ஸஃத் கோத்திரத்தாரிடமிருந்து தனது தாயாரிடம் நபி (ஸல்) அவர்கள் திரும்பியதும் அவர்கள் மடியிலேயே வளர்ந்தார்கள். அன்னாரது ஆறாவது வயதில் மதீனாவிலிருந்து திரும்பி வரும் போது அப்வா எனுமிடத்தில் அன்னாரது தாயாரும் மரணித்து விட்டார்கள். இவ்வாறே அன்னார் பெற்றோர் இருவரையும் இழந்த அநாதையாகி விட்டார்கள்.
٢
அன்னாரது பாட்டன் அப்துல் முத்தலிப் அன்னாரை மாக்காவிற்கு அழைத்து வந்து அவரே பராமரித்து, கவனித்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்களது வயது எட்டு ஆண்டுகளும், இரண்டு மாதங்களும், பத்து நாட்களாக இருக்கும் போது மக்காவில் அன்னாரது பாட்டன் அப்துல் முத்தலிபும் மரணித்து விட்டார்கள்.
٣
அவர்களைப் பராமரித்து, கவனிக்க அன்னாரது பெரிய தந்தை அபூ தாலிப் முன்வந்து, தனது பிள்ளைகளுடன் அன்னாரையும் இணைத்துக் கொண்டார்கள். அப்பிள்ளைகளை விட நபிகளாருக்கு முன்னுரிமை அளித்தார். பிரத்தியேகமாக மேலதிக கண்ணியம், மரியாதையை வழங்கினார்கள். இவ்வாறு நாற்பது ஆண்டுகளுக்கு மேல் அன்னாருக்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

நபித்துவத்திற்கு முன் அன்னாரது தொழில்

١
தனது சிறு பிராயத்தில் மக்காவிலுள்ள சிலரின் ஆடுகளை சில நாணயங்களுக்காக மேய்த்தார்கள்.
٢
வாலிபப் பருவத்தில் பெரிய தந்தை அபூ தாலிபுடன் வியாபர நோக்கமாக ஷாம் பகுதிக்கு (தற்போதைய ஸிரியா மற்றும் அதனை அண்டிய நாடுகள்) சென்றார்கள். மக்காவிலுள்ள சந்தைகளிலும் வியாபாரம் செய்துள்ளார்கள். பின் கதீஜா பின்து குவைலித் (ரலி) அவர்களது பணத்தில் வியாபாரம் செய்வதற்காக மீண்டும் ஷாம் பகுதிக்குச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்களது உண்மைப் பேச்சு, மாபெரும் அமானிதம், தயாள குணம் என்பவற்றை அம்மையார் கேள்விப்பட்ட போது தனது அடிமை மைஸராவுடன் தனது பணத்தில் ஷாம் பகுதிக்குச் சென்று வியாபாரம் செய்து வருமாறும், ஏனையோர் தருவதை விட சிறந்தளவு இலாபம் தருவதாகவும் அன்னாரிடம் ஆளனுப்பி அம்மையார் வேண்டினார்கள். நபியவர்களும் அதனை ஏற்றுக்கொண்டு, அம்மையாரின் பணத்தில் வியாபாரம் செய்யச் சென்றார்கள். அன்னாருடன் ஷாம் வரை அடிமை மைஸராவும் சென்றான்.

நபித்துவத்திற்கு முன் அன்னாரது வாழ்க்கை

நபி (ஸல்) அவர்களது நபித்துவத்திற்கு முன்னரான வாழ்க்கை சிறப்பானதாக, கௌரவமானதாகவே இருந்தது. பெருந்தவறு எதுவம் அறியப்படவில்லை, சருகல் எதுவும் பதியப்படவில்லை. அல்லாஹ் அன்னாரை நேரடியாக கண்கானித்து, அறியாமைக் கால அசிங்கங்களை விட்டும் பாதுகாத்து வந்த நிலையிலேயே அன்னார் வாலிபத்தைக் கழித்தார்கள். எனவே தமது சமூகத்தில் சிறந்த நாகரிகமுள்ளவராக, அழகிய பண்புடையவராக, கௌரவமான குடும்பத்தவராக, அழகிய அயலவராக, மகத்தான நிதானமுள்ளவராக, மிக உண்மையாளராக, மிகப் பெரிய நம்பகமானவராக இருந்ததுடன், ஆடவர்களை மாசுபடுத்தும் மானக்கேடான, மோசமான செயல், குணங்களை விட்டும் மிகத் தூரமானவராகவும் இருந்தார்கள். எந்தளவுக்கெனில் தமது சமூகத்தவரிடமே உண்மையாளர், நம்பிக்கையாளர் என அறியப்பட்டிருந்தார்கள்.

6. நபி (ஸல்) அவர்களின் மனைவியர்

நபி (ஸல்) அவர்கள் அன்னை கதீஜா (ரலி) அவர்களது பொருளாதாரத்தில் அடிமை மைஸராவுடன் ஷாம் பகுதிக்கு வியாபாரத்திற்குச் சென்ற போது அவ்வடிமை நபியவர்களிடம் கண்ட பிரமிக்க வைக்கும் உண்மை, நம்பிக்கையை ஊர்த் திரும்பியதும் தனது எஜமாட்டியிடம் வர்ணிக்க, அவ்வம்மையார் நபியவர்களை மணந்து கொள்ள விரும்பினார்கள். அதன்படி நபியவர்கள் தனது 25வது வயதில் அம்மையாரை மணந்து கொண்டார்கள். இவர்கள்தான் நபியின் முதல் மனைவியாகும். இவர்கள் மரணிக்கும் வரை நபியவர்கள் வேறெந்தப் பெண்ணையும் இரண்டாந்தாரமாக மணக்கவில்லை. அன்னாரின் பிள்ளைகளில் இப்ராஹீமைத் தவிர அனைவருக்கும் தாயார் அன்னையவர்கள்தான். ஹிஜ்ரத் பயணத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அன்னையவர்கள் மரணித்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மனைவியர்

١
கதீஜா (ரலி) அவர்கள்
٢
அன்னை கதீஜா (ரலி) அவர்கள் மரணித்த பின் ஸவ்தா பின்து ஸம்ஆ (ரலி) அவர்களை திருமணம் செய்தார்கள்.
٣
பின் அபூபக்ர் (ரலி) அவர்களது புதல்வி ஆஇஷா (ரலி) அவர்களை திருமணம் செய்தார்கள்.
٤
பின் உமர் (ரலி) அவர்களது புதல்வி ஹப்ஸா (ரலி) அவர்களை திருமணம் செய்தார்கள்.
٥
பின் ஸைனப் பின்து ஹுஸைமா (ரலி) அவர்களை திருமணம் செய்தார்கள்.
٦
மேலும் உம்மு ஸலமா (ரலி)அவர்களையும் மணந்தார்கள். அவர்களது பெயர் ஹின்து பின்து அபீ உமைய்யாவாகும்.
٧
மேலும் ஸைனப் பின்து ஜஹ்ஷ் (ரலி) அவர்களையும் மணந்தார்கள்.
٨
மேலும் ஜுவைரியா பின்துல் ஹாரிஸ் (ரலி)அவர்களையும் மணந்தார்கள்.
٩
மேலும் உம்மு ஹபீபா (ரலி)அவர்களையும் மணந்தார்கள். அவர்களது பெயர் ரம்லா பின்து அபீ ஸுப்யானாகும். ஹின்து என்ற மற்றுமொரு கருத்தும் உள்ளது.
١٠
மேலும் கைபர் போருக்கு அடுத்து ஸபிய்யா பின்து ஹுயைய் பின் அக்தப் (ரலி)அவர்களையும் மணந்தார்கள்.
١١
பின் மைமூனா பின்துல் ஹாரிஸ் (ரலி)அவர்களையும் மணந்தார்கள். இவர்களைத் தான் நபியவர்கள் இறுதியாகத் திருமணம் செய்தார்கள்.

சரியான கருத்தின் படி நபி (ஸல்) அவர்களின் பிள்ளைகள் எழுவர் ஆகும். (3 ஆண்கள், 4 பெண்கள்)

7. நபி (ஸல்) அவர்களின் பிள்ளைகள்

ஆண் பிள்ளைகள் மூன்று : 1. காஸிம், இவரது பெயரையே நபியவர்களுடைய புனைப்பெயருக்குப் பயன்படுத்தப்பட்டது. சில காலமே இவர் வாழ்ந்தார். 2. அப்துல்லாஹ், இவருக்கு தாஹிர், தைய்யிப் என இரு சிறப்புப் பெயர்களும் உண்டு. 3. இப்ராஹீம்.

பெண் பிள்ளைகள் நான்கு : 1. ஸைனப், இவர்தான் நபியவர்களின் மூத்த புதல்வியாகும். 2. ருகையா, 3. உம்மு குல்ஸூம். 4. பாதிமா. நபியவர்களின் பிள்ளைகள் அனைவரும் அவர்களது மனைவி கதீஜா (ரலி) அவர்களின் மூலம் கிடைத்தவர்களாகும். இப்ராஹீமைத் தவிர, அவர் முகௌகிஸ் மன்னர் நபியவர்களுக்கு பரிசளித்த மாரியா அல்கிப்திய்யா என்ற அடிமை மூலம் பிறந்தவராகும்.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்