கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் நிதிப் பரிவர்த்தனைகளில் இஸ்லாமிய நெறிமுறைகள்

நிதிப் பரிவர்த்தனைகளுடன் தொடர்பான இஸ்லாமிய சில நெறிமுறைகள் பற்றி இப்பாடத்தில் கற்போம்.

  • இஸ்லாத்தில் நிதிப் பரிவர்த்தனைகளின் அர்த்தத்தை அறிதல்.
  • நிதிப் பரிவர்த்தனைகளில் இஸ்லாத்தின் தனித்துவத்தை வெளிக்காட்டுதல்.
  • நிதிப் பரிவர்த்தனை விதிமுறைகளில் அவசியம் பின்பற்ற வேண்டிய இஸ்லாமியப் நெறிமுறைகளை தெளிவுபடுத்துதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

நெறிமுறைகள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களுடனும் நெருக்கமாக தொடர்புடையவை. இஸ்லாமிய ஒழுங்கு மற்றும் இஸ்லாமிய சமூகத்தைத் தனியாகக் காட்டுவதில் முக்கிய பங்கு வகிப்பது தார்மீக நெறிமுறைகள் மற்றும் அதனுடனான நெருங்கிய உறவுகளாகும். இதுதான் இஸ்லாமிய நிதி அமைப்பை மற்ற நிதி அமைப்புகளிலிருந்து தனித்துவமாகக் காட்டுகிறது.

இஸ்லாத்தில் நிதிப் பரிவர்த்தனைகள்

இது ஹலாலான சம்பாத்தியத்திற்காக மார்க்க சட்டம் அனுமதிக்கும் அனைத்து நிதி நடவடிக்கைகளையும் குறிக்கும். பணத்தின் அடிப்படையில் அல்லது நிதி உரிமைகளுக்கு வழிவகுக்கும் அனைத்து ஒப்பந்தங்களும் இதில் அடங்கும். உதாரணம் : விற்றல், வாங்கல், வாடகைக்கு விடல், நிறுவன முறைமை போன்ற ஒப்பந்தங்களைக் கூறலாம். இஸ்லாமிய பரிவர்த்தனைகள் தொடர்பான சட்டதிட்டங்களாகின்றன மக்களின் நிதி மற்றும் பொருளாதார பரிவர்த்தனைகளை ஒருவருக்கொருவர் ஒழுங்குபடுத்தும் சட்டத் தீர்ப்புகள் ஆகும்.

இஸ்லாமிய நிதிப் பரிவர்த்தனைகளின் குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்கள்:

١
பூமியில் வாழ்வாதாரத்தைத் தேடிச் செல்லுமாறு அல்லாஹ் பணித்துள்ள கட்டளைக்குக் கட்டுப்பட்டு அவனது திருப்தியை அடையதல். அல்லாஹ் கூறுகின்றான் : "அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல கோணங்களிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது". (முல்க் : 15).
٢
பணம் சம்பாதித்தல், வாழ்க்கை நிலைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் வாழ்வாதாரத்தைப் பெறுதல் மற்றும் அனுமதிக்கப்பட்ட உலக நன்மைகள், அபிலாசைகள் மற்றும் இன்பங்களை அடைவதற்காக பணத்தைப் பெருக்குதல்.
٣
அனைத்துப் பரிவர்த்தனைகளிலும் ஹராத்தைத் தவிர்ந்து, ஹலாலை முயற்சித்துப் பெறுவதன் மூலம் சுவனத்தில் உயர் பதவியை அடைதல். மூலமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "நம்பிக்கையான, நேர்மையான வியாபாரி நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகளுடன் இருப்பார்". (திர்மிதி 1209).
٤
வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு திறன் கொண்ட ஒரு நீதியான சமுதாயத்தை கட்டியெழுப்புவதையும் அதன் உறுப்பினர்கள் எதிர்பார்க்கும் உயர்வான வாழ்க்கையையும் உறுதி செய்யும் மார்க்க கட்டளைகளுக்கு இணங்க நிதி புழங்குதல்.
٥
சமூகத்தின் ஒவ்வொரு தனிநபரையும் உயர்ந்த பண்பாடுடையவர்களாகவும், தமது சொல், செயல்களால் அல்லாஹ்வின் குறிக்கோளான அடிமைத்துவத்தை உறுதிப்படுத்துவோராகவும் அவர்களை ஆக்கும் விதத்தில் அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்தல்.
٦
பூமியைப் பிரதிநிதித்துவம் செய்து, அல்லாஹ்வின் கட்டளைப் பிரகாரம் அதனைப் பரிபாலனம் செய்தல். அல்லாஹ் கூறுகின்றான் : "அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான் - நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன்;. மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடயவன்". (அன்ஆம் : 165).

இஸ்லாமிய பரிவர்த்தனைகளில் சமநிலை பேணுதல்

இஸ்லாமே சத்திய மார்க்கமாகும். ஏனைய ஷரீஅத்கள், ஒழுங்கமைப்புகளுக்கு மாற்றமாக இஸ்லாமே மக்களுக்குப் பொருத்தமான, அவர்களை சீராக்கக்கூடியவற்றை கொண்டுவந்துள்ளது. ஏனெனில் அது மனிதர்களைப் படைத்தவனிடமிருந்தே வந்துள்ளது. அவர்களையும், அவர்களுக்குப் பயனளிப்பதையும் அவனே மிக நன்கறிவான். அல்லாஹ் கூறுகின்றான் : "(அனைத்தையும்) படைத்தவன் அறிய மாட்டானா? அவன் நுணுக்கமாக கவனிப்பவன்; யாவற்றையும் நன்கு தெரிந்தவன்". (முல்க் : 14). இஸ்லாம் உடலின் தேவைகளையும் உலக விடயங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் நிதி அமைப்புடன் வந்தள்ளது, மேலும் ஆன்மாவின் தேவைகளையும் மறுமை விடயங்களையும் அது கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

முதலாவது : உலகப் பகுதி : அனைத்து வியாபாரிகளிடையேயும் நீதியை அடையும் விதத்தில், ஒவ்வொரு நபருக்கும் அவரவர் உரிமையை வழங்கும் மற்றும் அனைவருக்கும் போதுமானதாக இருக்கும் வகையில் இஸ்லாமிய ஷரியா மக்களின் நிதி பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்தியுள்ளது, அதே போன்று பரிவர்த்தனைகளில் அனுமதியின் வாயிலை விசாலப்படுத்தி, அதில் ஈடுபடும் இருவரில் ஒருவருக்கேனும் தீங்கு ஏற்படுத்தும் அனைத்தையும் தடை செய்துள்ளது.

இரண்டாவது : ஆன்மீகப் பகுதி : அனைத்து சட்டங்களினதும் மிக உயர்ந்த நோக்கம் அல்லாஹ்வின் திருப்தியை அடைந்து, சுவனத்தை வெல்வதாகும். இதனுடன் சேர்த்து, இஸ்லாமிய நிதிப் பரிவர்த்தனைகள் நீதியை நிலைநிறுத்துதல், கடனாளிக்குத் தவணை நீடித்தல் போன்ற உபகாரத்தைத் தூண்டுதல், வட்டி சூதாட்டம் போன்ற உள்ளத்தை உறுத்தும் அனைத்தையும் தடுத்தல் போன்றவற்றினூடாக விசுவாசிகளுக்கு மத்தியில் சகோதரத்துவத்தை உருவாக்குகின்றது.

உரிமைகளைக் கவனிப்பதினூடாக நிதிப் பரிவர்த்தனைகளின் சில வடிவங்கள்

முதலாவது : நீதி : இது கூட்டல், குறைவின்றி நிதிப் பரிவர்த்தனையின் இரு தரப்பினரது உரிமைகளையும் கவனித்திற் கொள்ளும் விடயமாகும். உதாரணமாக வியாபாரம், அதேவிலைக்கு வாடகைக்கு விடுதல் போன்றவற்றைக் கூறலாம். அல்லாஹ் கூறுகின்றான் : "அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்துள்ளான், வட்டியைத் தடுத்துள்ளான்". (பகரா : 275). இரண்டாவது : சிறப்பு : இது உபகாரம் மற்றும் தர்மமாகும். கடனாளியின் தவணையை நீடித்தல், அல்லது கடனைத் தள்ளுபடி செய்தல் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். அல்லாஹ் கூறுகின்றான் : "அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்; இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும்". (பகரா : 280). அதேபோன்றுதான் பணியாளுடன் குறித்த தொகைக்கு பொருந்திவிட்டு, அதனை விட மேலதிகமாக வழங்குவதாகும்.அல்லாஹ் கூறுகின்றான் : "இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்". (பகரா : 195).

இரண்டாவது : அநீதி : இது வட்டி, சூதாட்டம், பணியாளின் கூலியை மறுத்தல் போன்றவற்றின் மூலம் தனது உரிமைக்கு மேலதிகமாகப் பெறுவதாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள், - நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்". (பகரா : 278, 279). நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்' என்று அல்லாஹ் கூறினான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன்; இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்!". (புஹாரி 2227).

நிதிப் பரிவர்த்தனைகளில் இஸ்லாமிய சட்டதிட்டம் அழைப்பு விடுக்கும் நெறிமுறைகளில் சில (1) :

١
அனுமதிக்கப்பட்ட ஒப்பபந்தங்களைக் கடைபிடித்து, அவற்றை நிறைவேற்றல்ல். அல்லாஹ் கூறுகின்றான் : "முஃமின்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள்". (மாஇதா : 01).
٢
உரிமைகளை அதற்குரியவர்களுக்கு திருப்பி ஒப்படைத்தல். அல்லாஹ் கூறுகின்றான் : "நம்பிக்கை வைக்கப்பட்டவர் தனது அமானிதத்தை நிறைவேற்றட்டும், மேலும் தனது இரட்சகனை அஞ்சிக் கொள்ளட்டும்". (பகரா : 283).
٣
சாட்சியத்தை மறைக்காமலிருத்தல். அல்லாஹ் கூறுகின்றான் : "அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்". (பகரா : 283).
٤
நேர்மை மற்றும் நலவு நாடல் : வியாபாரி, வாடிக்கையாளர் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அவ்விருவரும் உண்மை பேசிக்குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!". (புஹாரி 2079, முஸ்லிம் 1532).
٥
ஏமாற்று, மோசடிகளின்றி குறையைத் தெளிவுபடுத்தல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "எம்மை ஏமாற்றுபவர் எம்மைச் சார்ந்தவரல்லர்". (முஸ்லிம் 101).

நிதிப் பரிவர்த்தனைகளில் இஸ்லாமிய சட்டதிட்டம் அழைப்பு விடுக்கும் நெறிமுறைகளில் சில (2) :

١
சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைத் தவிர்ந்து கொள்ளல். இது ஒரு மனிதனுக்கு ஹராமா, ஹலாலா? என்ற சந்தேகத்திற்கிடமான விடயங்களைக் குறிக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "நிச்சயமாக ஹலால் தெளிவானது, ஹராமும் தெளிவானது, அவ்விரண்டிற்குமிடையில் சில சந்தேகத்திற்கிடமான விடயங்களும் உள்ளன. அச்சந்தேகத்திற்கிடமானவற்றைத் தவிர்ந்து கொள்பவர் தனது மார்க்கத்திற்கும், மானத்திற்கும் பாதுகாப்பெடுத்துக் கொண்டு விட்டார். அச்சந்தேகத்தில் வீழ்ந்தவர் ஹராத்தில் வீழ்ந்து விட்டார்". (புஹாரி 52, முஸ்லிம் 1599).
٢
மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் உண்ணாமலிருத்தல், அல்லாஹ் கூறுகின்றான் : "அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்". (பகரா : 188).
٣
ஒரு முஸ்லிம் தனக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்ப வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்". (புஹாரி 13, முஸ்லிம் 45).

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்