தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் தொழுகையின் நிபந்தனைகளும் அதன் சட்டங்களும்
இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:
தொழுகையின் நிபந்தனைகள்
தொடக்கு, அசுத்தங்களிலிருந்து தூய்மையடைதல். நபியவர்கள் கூறியதைத் தான் கேட்டதாக அனஸ் ரலி அவர்கள் கூறினார்கள் : ''வுழூவின்றி தொழுகை ஏற்கப்பட மாட்டாது"" (இப்னு மாஜாஃ 273).
குட்டை அல்லது மென்மை காரணமாக உடல்உறுப்புக்கள் தெரியாதளவிலுள்ள ஓர் ஆடையினால் மறைக்க வேண்டிய பகுதிகளை மறைப்பதும் ஒரு நிபந்தனையாகும்.
தொப்புள் முதல் முழங்கால் வரை
முகம், இரு மணிக்கட்டுகளைத் தவிர ஏனைய அனைத்து பகுதிகளையும் மறைக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "பருவமடைந்த பெண்ணின் தொழுகையை (கழுத்தை மறைக்கும்) முக்காடின்றி அல்லாஹ் ஏற்க மாட்டான்". (அபூதாவூத் 641, திர்மிதி 377, இமாம் திர்மிதி இதனை ஹஸன் எனும் தரத்திலுள்ள செய்தியெனக் குறிப்பிட்டுள்ளார்கள்).
அல்லாஹ் கூறுகின்றான் : "ஆதமுடை மக்களே நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் உங்களது அலங்காரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்". (அஃராப் 31). அவ்ரத்தை மறைப்பதுதான் அலங்காரத்தின் அதிகுறைந்தபட்ச அளவாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் : "ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக". (பகரா : 149).
முஸ்லிம்களின் கிப்லாவானது நபிமார்களின் தந்தையெனப் போற்றப்படும் இப்ராஹீம் அலை அவர்கள் நிர்மாணித்து, பல நபிமார்கள் அதனை நோக்கிச் சென்ற புனித கஃபா ஆலயமாகும். அது எவ்விதப் பயனோ, தீங்கோ செய்யாத வெறும் கல் என்பதை நாம் அறிவோம். எனினும் அனைத்து முஸ்லிம்களும் தொழுகையில் ஒரே திசையை முன்னோக்க வேண்டுமென்பதற்காக அல்லாஹ் அதனை முன்னோக்கும் படி எம்மைப் பணித்துள்ளான். எனவே நாமும் இவ்வாறு முன்னோக்குவதன் மூலம் அல்லாஹ்வை வணங்குவோம்.
கிப்லாவை முன்னோக்கும் முறை
கஃபாவைக் கண்முன்னால் காணும் ஒரு முஸ்லிம் அதனைத் தான் முன்னோக்க வேண்டும். தூரத்திலிருப்பவர்கள் அது அமைந்திருக்கும் இடமான மக்கா திசையை முன்னோக்க வேண்டும். சிறுதளவு அதனை விட்டும் திரும்புவதால் பாதிப்பு ஏற்பட மாட்டாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "கிழக்கிற்கும் மேற்கிக்கும் இடையிலுள்ள பகுதி கிப்லாவாகும்". (திர்மிதி 342).
பொதுவாக இயலாமையால் ஏனைய கடமைகள் தளர்ந்து விடுவது போன் இக்கடமையும் தளர்ந்து விடும். அல்லாஹ் கூறுகின்றான் : "நீங்கள் அல்லாஹ்வை உங்களது சக்திக்குட்பட்டவாறு அஞ்சிக் கொள்ளுங்கள்". (தகாபுன் : 16).
இது தொழுகை செல்லுபடியாவதற்கான நிபந்தனையாகும். குறிப்பிட்ட ஒரு தொழுகைக்குரிய நேரம் வருமுன் அத்தொழுகை செல்லுபடியாக மாட்டாது. அதற்குரிய நேரத்தை விட பிற்படுத்துவதும் ஹராமாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "நிச்சயமாக தொழுகை விசவாசிகள் மீது நேரம் வரையறுக்கப்பட்ட கடமையாகிவிட்டது.
தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே நிறைவேற்றுவதுதான் மிகச் சிறந்ததாகும். உம்மு பர்வா (ரலி) கூறுகின்றார் : "செயல்களில் சிறந்தது எதுவென நபியவர்களிடம் வினவப்பட்ட போது "தொழுகையை அதன் ஆரம்பநேரத்தில் தொழுவதாகும்" என பதிலளித்தார்கள்". (அபூதாவூத் : 426).
தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது கடமையாகும். இரு தொழுகைகளை சேர்த்துத் தொழ சலுகை வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களைத் தவிர அதனைப் பிற்படுத்துவது ஹராமாகும்.
நினைவு வந்தவுடன் விரைந்து அதனை நிறைவேற்றி விட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) கூறினார்கள் : யாராவது தொழாமல் தூங்கினால், அல்லது அதை மறந்தால் நினைவு வந்ததும் அதனைத் தொழுது கொள்ளட்டும். (முஸ்லிம் 684).
தொழுகை கடமையாகுதல்
மாதவிடாய், பிரசவ இரத்தம் இல்லாத, பருவமடைந்த, புத்தியுள்ள அனைத்து ஆண், பெண்கள் மீதும் தொழுகை கடமையாகும். மாதவிடாய், பிரசவ இரத்தம் உள்ள பெண் அக்காலப்பகுதியுனுள் தொழக் கூடாது. உதிரப்போக்கு நின்று, சுத்தமடைந்த பின் அதனை மீட்ட வேண்டிய அவசியமுமில்லை.
பின்வரும் அடையாளங்களுள் ஒன்று இருந்தால் அவர் பருவமடைந்தவர் எனத் தீர்மானிக்கப்படும் :
ஐவேளைத் தொழுகைகளும் அதன் நேரங்களும்.
முஸ்லிம் மீது அல்லாஹ் தினமும் ஐந்து நேரத் தொழுகைகளை விதியாக்கியுள்ளான். அவை தான் அவனது மார்க்கத்தின் பிரதான தூணாகவும், மிக மிக வலியுறுத்தப்பட்ட கடமையுமாகும். அதற்கென சில வெளிப்படையான நேரங்களை பின்வருமாறு அமைத்துள்ளான் :
பஜ்ருத் தொழுகை இரண்டு ரக்அத்களைக் கொண்டது. அதன் நேரம் மேகத்தில் வெளிச்சம் படர ஆரம்பித்தது முதல் சூரியன் உதிக்கும் வரையிலாகும்.
இது நான்கு ரக்அத்களைக் கொண்டது. இதன் நேரம் சூரியன் உச்சிக்கு வந்து மேற்குப் பக்கமாக சற்று சாய ஆரம்பித்தது முதல் ஒவ்வொரு பொருளுடைய நிழலும் அதற்குச் சமமாக ஆகும் வரையிலாகும்.
இதுவும் நான்கு ரக்அத்களைக் கொண்டது. இதன் நேரம் ஒவ்வொரு பொருளுடைய நிழலும் அதற்குச் சமமாக ஆகி ளுஹருடைய நேரம் முடிவடைந்ததிலிருந்து சூரியன் மறையும் வரையிலாகும். சூரியக் கதிர்கள் நிறம் மங்கி, மஞ்சள் நிறமாவதற்கு முன் அத்தொழுகையைத் துரிதப்படுத்துவது அவசியமாகும்.
இது மூன்று ரக்அத்களைக் கொண்டது. அதன் நேரம் சூரியன் அஸ்தமித்து, அதன் வட்ட அமைப்பும் மறைந்ததிலிருந்து அதற்குப் பின் தெரியும் செம்மேகம் மறையும் வரையாகும்.
இது நான்கு ரக்அத்களைக் கொண்டது. அதன் நேரம் செம்மேகம் மறைந்ததிலிருந்து நள்ளிரவு வரையாகும். நிர்ப்பந்தத்தின் போது மாத்திரம் பஜ்ர் உதயமாகும் வரை நிறைவேற்றலாம்.
தொழுமிடம்
தொழுகையை கூட்டாக நிறைவேற்றுமாறு இஸ்லாம் பணித்துள்ளது. முஸ்லிம்களின் மாநாடாக, சமூக ஒன்றுகூடலாக அமைவதற்காக அக்கூட்டுத் தொழுகை பள்ளியில் நடைபெறுவதை ஊக்கப்படுத்துகின்றது. அதன் மூலம் அவர்களுக்கிடையில் சகோதரத்துவம், நேசம் அதிகரிக்கும். தனித்துத் தொழுவதை விட பன்மடங்கு சிறந்ததாக கூட்டுத் தொழுகையை ஆக்கியுள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "ஒரு மனிதன் கூட்டாகத் தொழுவது தனித்துத் தொழுவதை விட இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்". (புஹாரி 645, முஸ்லிம் 650, அஹ்மத் 5921).
தொழுமிடத்திற்கான வரையறைகள்
தொழுமிடம் சுத்தமாக இருக்க வேண்டுமென இஸ்லாம் நிபந்தனை விதித்துள்ளது. அல்லாஹ் கூறுகின்றான் :“இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்”. (பகரா : 125).
ஓர் இடம் தூய்மையானது என்பதே அடிப்படையாகும்.
ஒன்றின் அடிப்படை தூய்மையாகும். அசுத்தம் இடையில் ஏற்படக் கூடியதாகும். எனவே அசுத்தம் இருப்பதாக அறியப்படாவிட்டால் அப்பொருள் தூய்மையானதென முடிவாக்கப்படும். புவியின் சுத்தமான மேற்பரப்பு அனைத்திலும் தொழ முடியும். தொழுவதற்கென்றே பிரத்தியேகமாக விரிப்போ, துணிகளோ சிரமப்பட்டு எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
தொழுமிடத்திற்கென சில வரையறைகள் உள்ளன . தொழுபவர் அவற்றைக் கவனத்திற் கொள்வது அவசியமாகும். அவற்றுள் சில :
1. தொழுமிடத்தில் மக்களை நோவினைப்படுத்தலாகாது. உதாரணமாக போக்குவரத்துப் பாதைகள், நடைபாதைகள், நிறுத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ள இடங்கள் போன்ற மக்களுக்கு இடையூறு, சனநெரிசல் ஏற்படுத்தக்கூடிய இடங்களில் தொழுவதைக் குறிப்பிடலாம். நபியவர்கள் நோவினை செய்வதைத் தடுத்துள்ளார்கள். அவர்கள் கூறினார்கள் : 'தீங்கிழைக்கவும் கூடாது. தீங்கிற்குப் பழி வாங்கவும் கூடாது”. (இப்னு மாஜா 2340, அஹ்மத் 2865.)
2. உருவப் படங்கள், உயர்ந்த சத்தங்கள், இசைகள் போன்ற தொழுபவரின் கவனத்தைத் திசைதிருப்பக்கூடிய ஏதும் அவ்விடத்தில் இருக்கக்கூடாது.
3. நடனமேடைகள், இரவுக்களியாட்ட விடுதிகள் போன்ற அடிப்படையிலேயே பாவத்திற்காக உருவாக்கப்பட்ட இடமாக இருக்கக்கூடாது. அவ்வாறான இடங்களில் தொழுவது வெறுக்கப்பட்டதாகும்.
اختر مستوى الشرح المناسب لك
يحتوي الدرس الآن على طبقات اختيارية تساعدك على المراجعة السريعة أو التعمق دون مغادرة الدرس.
- الملخص: نظرة سريعة في نحو دقيقة.
- الأساسي: محتوى الدرس الأصلي وهو المسار المعتمد للتقدم.
- المتعمق: تفاصيل إضافية اختيارية عند توفرها.
تقدمك وإكمال الدرس يعتمدان دائما على صفحات المستوى الأساسي.