தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் அல்குர்ஆன் ஓதுவதன் சட்டங்கள் மற்றும் ஒழுங்குகள்
இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:
அல்குர்ஆன் ஓதுவதன் ஒழுங்குகள்
நாம் ஓதும் குர்ஆன் ஏற்கப்படவும், அதற்கான கூலி கிடைக்கவும் ஓதும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் சில உள்ளன. அவற்றுள் சில ஓதுவதற்கு முன்னரும், மற்றும் சில ஓதும் போதும் கடைபிடிக்க வேண்டும்:
அல்குர்ஆனை மனனமிடுவதன் சட்டம்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "அல்குர்ஆனை மனனமாக ஓதுபவர் கடமை தவறாத கண்ணியமிக்கத் தூதர்(களான வானவர்)களுடன் இருப்பார்". (புஹாரி 4937).
அல்குர்ஆன் ஓதுவதன் சட்டம்
ஒரு முஸ்லிம் தன்னால் முடியுமானளவு அல்குர்ஆனை அதிகமாக ஓத வேண்டும், அல்லாஹ் கூறுகின்றான் : "நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள்". (பாதிர் : 29).
அல்குர்ஆன் ஓதுவதை மௌனமாக செவிமடுப்பதன் சட்டம்
கடமையான தொழுகை மற்றும் குத்பாப் பேருரைகளில் அல்குர்ஆன் ஓதுவதை மௌனமாக செவிமடுப்பது முஸ்லிமின் கடமையாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "நீங்கள் அருள் புரியப்படுவதற்காக குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள்". (அஃராப் : 204).
அல்லாஹ்வின் வார்த்தைக்கு மதிப்பளித்து ஒழுக்கம் பேணும் பொருட்டு குர்ஆன் ஓதப்படும் ஏனைய நேரங்களிலும் மௌனித்து, செவிமடுப்படுது விரும்பத்தக்கதாகும்.
அல்குர்ஆனை விசுவாசித்து, அதிலுள்ள ஹலாலை ஹலாலாகவும், ஹராத்தை ஹராமாகவும் ஏற்பதன் மூலம் அதன் சட்டங்களை அமுல்படுத்துவது, அதன் தடைகளைத் தவிர்ந்து, ஏவல்களை எடுத்து, அதன்படி செயல்படுவது அனைவர் மீதும் கடமையாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள் : "அல்குர்ஆனை ஓதி, அதனை மனனமிட்டு, அதிலுள்ள ஹலாலை ஹலாலாக ஏற்று, ஹராத்தை ஹராமாக ஏற்பவரை அல்லாஹ் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்கின்றான். தனது குடும்பத்திலிருந்து நரகிற்குச் செல்லவிருக்கும் பத்து பேர் விடயத்தில் இவரது பரிந்துரையை ஏற்கின்றான்". (திர்மிதீ 2905).
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக அபூ அப்திர்ரஹ்மான் அஸ்ஸுலமீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : "நாம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து பத்து வசனங்களைக் ஓதக் கற்றால் அதிலுள்ள விடயங்களைக் கற்காமல் அடுத்த பத்து வசனங்களைக் கற்க மாட்டோம்". (ஹாகிம் 2047).
குர்ஆனைத் தொடர்ந்து ஓதுவதன் மூலம் அதில் அதிக கரிசனை என்பது அவசியமாகும். அதனை மறக்காதிருக்கவும், புறக்கணிக்காது இருக்கவும் தினமும் சிறிதளவாயின் அல்குர்ஆன் ஓதுவது அவசியமாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "“என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார்". (புர்கான் : 30).
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் : "குர்ஆனை (ஓதி அதை)க் கவனித்து வாருங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! கயிற்றில் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தை விட மிக வேகமாகக் குர்ஆன் (நினைவிலிருந்து) தப்பக்கூடியதாகும்". (புஹாரி 5033).
அல்குர்ஆன் ஓதுவதற்கு முன்னர் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் :
ஓதும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் :
اختر مستوى الشرح المناسب لك
يحتوي الدرس الآن على طبقات اختيارية تساعدك على المراجعة السريعة أو التعمق دون مغادرة الدرس.
- الملخص: نظرة سريعة في نحو دقيقة.
- الأساسي: محتوى الدرس الأصلي وهو المسار المعتمد للتقدم.
- المتعمق: تفاصيل إضافية اختيارية عند توفرها.
تقدمك وإكمال الدرس يعتمدان دائما على صفحات المستوى الأساسي.