கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் இஸ்லாத்தில் இணைவது எவ்வாறு

ஒரு மனிதன் இஸ்லாத்தில் இணையும் அந்த வினாடிதான் அவனது வாழ்வில் மகத்தான வினாடியாகும். இந்த வாழ்க்கையில் தனது இருப்பின் காரணத்தை அறிந்த பின் அதுதான் அவனுடைய யதார்த்தமான பிறப்பாகும். ஒரு நபர் முஸ்லிமாக மாறி, இம்மகத்தான மார்க்கத்தில் நுழைவதற்குத் தேவையானவற்றை இப்பாடம் உள்ளடக்குகின்றது.

  • இஸ்லாத்தில் இணையும் முறையை அறிதல்.
  • பாவமீட்சியின் அவசியம், இம்மார்க்கத்தில் நிலைத்திருப்பதற்கான பிரதான வழிகளை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

இந்தப் பாடத்தின் மொழிபெயர்ப்பு பின்வரும் மொழிகளில் கிடைக்கிறது:

இரு ஷஹாதாக்களையும் அவற்றின் அர்த்தங்களை அறிந்து, உறுதி கொண்டு, அவற்றுக்குக் கட்டுப்பட்ட நிலையில் அவற்றை மொழிவதன் மூலம் ஒரு மனிதன் இஸ்லாத்தில் இணைகின்றான்.

அந்த இரு ஷஹாதாக்களும் :

١
அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் (அதாவது : உண்மையாக வணங்கப்படக்கூடிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என நான் சாட்சி பகர்கின்றேன். எனவே எந்தவொரு இணையுமின்றி அவனை மாத்திரமே நான் வணங்குகின்றேன்.)
٢
வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் ரஸூலுல்லாஹ். (அதாவது : முஹம்மத் ஸல் அவர்கள் அனைத்து மக்களுக்குமான இறைத்தூதர் என அவரது ஏவல்களுக்குக் கட்டுப்பட்டு, விலக்கல்களைத் தவிர்ந்து கொண்டவனாக சாட்சி பகர்கின்றேன். அவர்களது வழிமுறைப் பிரகாரமே நான் அல்லாஹ்வை வணங்குகின்றேன்).

நவ முஸ்லிம் குளித்து சுத்தமாதல்

ஒரு மனிதன் இஸ்லாத்தில் இணையும் அந்த வினாடிதான் அவனது வாழ்வின் மிக முக்கியமான தருணமாகும். தான் இவ்வுலகில் பிறந்ததற்கான காரணத்தைக் கண்டறிந்த உண்மையான பிறப்பு அதுதான் . அச்சந்தர்ப்பத்தில் அவன் குளித்துக் கொள்வது விரும்பத்தக்கதாகும். தனது உள்ளத்தை இணைவைப்பை விட்டும் சுத்தப்படுத்தியது போன்று வெளி உறுப்புக்களை நீரினால் சுத்தம் செய்வது விரும்பத்தக்கது.

அரபுத் தலைவர்களில் ஒருவர் இஸ்லாத்தில் இணையும் போது அவருக்கும் நபியவர்கள் குளிக்கும் படி பணித்தார்கள். (பைஹகீ 837).

பாவமீட்சி பெறுதல்

பாவமீட்சி என்பது அல்லாஹ்வின் பால் மீள்வதாகும். தனது பாவம், இறை நிராகரிப்பை விட்டு அல்லாஹ்விடம் மீண்ட அனைவரும் பவமீட்சி பெற்றவராவார்.

பாவமீட்சி செல்லுபடியாவதற்கான நிபந்தனைகள்

١
பாவத்தைக் களைதல் : ஒரு பாவத்தில் தொடந்து நிலைத்திருக்கும் நிலையிலேயே தவ்பா (பாவமீட்சி) செல்லுபடியாக மாட்டாது. முறையான தவ்பாவிற்குப் பின் அந்தப் பாவத்தை மீண்டும் செய்வதன் மூலம் முந்திய தவ்பா முறிய மாட்டாது. எனினும் புதிதாக தவ்பாச் செய்ய வேண்டிய அவசியமுள்ளது. இவ்வாறுதான் ஒவ்வொரு பாவத்திற்கும்.
٢
ஏற்கனவே செய்த பாவங்கள், தவறுகளை நினைத்துக் கவலைப்படல், தன்னால் ஏற்ப்பட்ட பாவங்களை நினைத்து கவலைப்பட்டு பச்சாதாபப் படுபவனிடமிருந்து தான் தவ்பா சாத்தியமாகும். தனது முந்தைய பாவங்களைப் பற்றிப் பேசி பெருமைப் பட்டுக்கொள்பவன் கவலைப்படுபவனாகக் கணிக்கப்பட மாட்டான். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் "தவ்பா என்பது கவலைப்படுதல்" எனக் கூறியுள்ளார்கள். (இப்னு மாஜா 4252).
٣
அதே பாவத்தை மீண்டும் செய்வதில்லை என உறுதி கொள்ளல். மீண்டும் அதே பாவத்தைச் செய்வதாக நினைத்துக் கொண்டு தவ்பாச் செய்பவனுடைய அத்தவ்பா செல்லுபடியாக மாட்டாது.
٤
மனிதர்களுடன் சம்பந்தப்பட்ட பாவங்களாக இருந்தால் அநியாயங்களை உரியவர்களுக்கு ஒப்படைத்தல்.

மனஉறுதியை செயல்படுத்தும் படிமுறைகள்

١
எந்த சூழ்நிலையிலும், எந்த தடைகள் வந்தாலும் ஏற்கனவே செய்த பாவத்தின் பக்கம் மீளாமல் அதிக கரிசனை எடுத்தல் வேண்டும். நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : மூன்று விடயங்கள் உள்ளன. அவை யாரிடமுள்ளனவோ அவர் ஈமானின் சுவையைப் பெற்றுக்கொண்டவர் ஆவார். பின்னர் அவற்றில் ஒன்றாக நெருப்பில் எறியப்படுவதை வெறுப்பது போன்று இறைநிராகரிப்பிலிருந்து அல்லாஹ் அவரைக் காத்த பின்னர் மீண்டும் அதன் பால் மீள்வதை வெறுப்பதாகும். (புஹாரி 21, முஸ்லிம் 43).
٢
தனது ஈமான் பலவீனப்பட்டு, பாவம் செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கும் இடங்கள், நபர்களை விட்டும் தூரமாகியிருத்தல்.
٣
மரணிக்கும் வரை அல்லாஹ்வின் மார்க்கத்தில் உறுதியாக இருக்க வேண்டுமென எந்த மொழியாயினும், எந்த வார்த்தையிலும் அவனிடம் வேண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அவற்றுள் அல்குர்ஆன் ஸுன்னாவில் இடம்பெற்றுள்ள பின்வரும் துஆக்களும் உள்ளடங்கும். “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (ஆல இம்ரான் : 8). "உள்ளங்களை பிரட்டக் கூடியவனே எனது உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக". (திர்மிதி: 2140).

தவ்பாவிற்குப் பின் என்ன?

ஒரு மனிதன் தவ்பாச் செய்து, மீண்டால் எவ்வளவு பெரிய பாவமாக இருந்தாலும் அல்லாஹ் அனைத்தையும் மன்னித்து விடுகின்றான். அவனுடைய அருள் அனைத்தையும் மிகைத்து விட்டது. அல்லாஹ் கூறுகின்றான் :“வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட என் அடியார்களே! (உங்களில்) எவரும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (ஸுமர் : 53).

எனவே அந்த முஸ்லிம் உண்மையான முறையான தவ்பாவின் மூலம் தன் மீது எந்தப் பாவமுமற்ற நிலையிலேயே வெளியேறுகின்றான். மாறாக உண்மையாகக் கவலைப்பட்டு தவ்பாச் செய்பவர்களுக்கு அவர்களுடைய பாவங்களை நன்மைகளாக மாற்றி மகத்தான ஒரு பிரதிபலனை அல்லாஹ் வழங்குகின்றான். அவன் கூறுகின்றான் : “ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்”. (புர்கான் : 70).

யார் இந்த நிலையில் இருக்கின்றாரோ அவர் பின்னடைவுக்கு இட்டுச்செல்லும் ஷைத்தானின் பொறிகளில் வீழ்ந்திடாமலிருக்க அந்தப் பாவமீட்சியைப் பாதுகாப்பதும், அதனைத் தக்க வைக்க விலைமதிப்பற்றதை செலவழிப்பதும் அவசியமாகின்றது.

ஈமானின் சுவை

அல்லாஹ், அவனது தூதர் ஆகியோரின் நேசம் யாரிடத்தில் மகத்தானதாக அமைந்து விடுகின்றதோ, பிறரை அல்லாஹ்வுடனான அவர்களின் நெருக்கம், சரியான மார்க்கம், இஸ்லாம் என்பவற்றுக்கமைய நேசிக்கிறாரோ, நிராகரிப்பு, இணைவைப்பு, வழிகேடு ஆகியவற்றிலிருந்து மீண்ட பின் மீண்டும் அவற்றில் வீழ்வதை நெருப்பினால் எறிக்கப்படுவதை வெறுப்பது போல் வெறுக்கின்றாரோ , அப்போது அல்லாஹ்வை நெருங்கி, உளஅமைதியடைந்து, நேர்வழி, அருட்கொடை, மார்க்கம் ஆகியவற்றைப் பார்த்து மகிழ்ச்சியடைவதின் மூலம் அவனது உள்ளத்தில் ஈமானின் சுவையை உணர்கின்றான். நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : “எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்ற அனைத்தையும் விட அதிக நேசத்திற்குரியராவது; ஒருவர் மற்றொரு வரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது; குப்ரிலிருந்து அல்லாஹ் அவரை விடுத்த பின், நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது”. (புஹாரி 21, முஸ்லிம் 43).

மார்க்கத்தைப் பற்றிப்பிடித்து, அதன் போது ஏற்படும் நோவினைகளைப் பொறுத்துக்கொள்ளல்

பெறுமதிமிக்க பொக்கிசமொன்றைப் பொற்றுக் கொண்டவன் அதனைக் கள்வர்கள், கொள்ளையர்களின் கையிலிருந்து பாதுகாக்க ஆர்வம் காட்டுவான், அதற்கு எச்சேதமும் ஏற்படாமல் பாதுகாப்பான். இஸ்லாம்தான் முழு மனித சமூகத்திற்கும் கிடைத்துள்ள மிகப் பெரிய பரிசாகும். இது ஒரு அறிவுசார் நோக்குநிலையோ, அல்லது ஒரு நபர் விரும்பும் போதெல்லாம்செய்யும் ஒரு பொழுதுபோக்கோ அல்ல. மாறாக அவனுடைய வாழ்க்கையின் அனைத்து ஆடல், அசைவுகளையும் இயக்கும் ஒரு மார்க்கமாகும். இதனால்தான் அல்லாஹ் தனது தூதருக்கு இஸ்லாத்தையும், குர்ஆனையும் விட்டுக்கொடுக்காமல் பலமாகப் பற்றிக்கொள்ளுமாறு பணித்துள்ளான். ஏனெனில் அதுதான் நேரான வழியாகும். அல்லாஹ் கூறுகின்றான் : “(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர்”. (ஸுஃக்ருப் : 43).

தான் இஸ்லாத்தை ஏற்ற பின்னர் சோதனைகள் ஏற்பட்டதையிட்டு ஒரு முஸ்லிம் வருந்தக் கூடாது. ஏனெனில் இதுதான் சோதனையில் அல்லாஹ்வின் நியதியாகும். எம்மை விடச் சிறந்த எத்தனையோ பேர் கடுமையாக சோதிக்கப்பட்டு பொறுமை காத்து அவற்றை எதிர் கொண்டார்கள். இதோ அல்லாஹ் எமக்குக் கூறியுள்ள பல நபிமார்களின் சம்பவங்கள். தொலைவிலுள்ளவர்கள் ஒரு புறமிருக்க நெருங்கிய உறவுக்காரர்களாலேயே பல சோதனைகள் அவர்களுக்கு வந்தன. அல்லாஹ்வின் பாதையில் அவர்களைத் தாக்கிய அந்தச் சோதனைகளால் சற்றும் அவர்கள் பலவீனப்பட்டுப் போகவோ, தமது வழியில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவோ இல்லை. இது உனது ஈமானின் உண்மைத் தன்மைக்காகவும், மனஉறுதியின் வலிமைக்காகவும் அல்லாஹ்விடமிருந்து வரும் சோதனையாகும். இச்சோதனையின் அளவு நீயும் உறுதியாக இரு. இம்மார்க்கத்தைப் பலமாகப் பிடித்துக்கொள். நபியவர்கள் அதிகம் கேட்கும் அந்த துஆவை நீயும் அதிகம் கேள். "உள்ளங்களை பிரட்டக் கூடியவனே எனது உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக". (திர்மிதி: 2140).

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்