தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் சூதாட்டம்
இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:
சூதாட்டம் என்றால் என்ன ?
சூதாட்டம் என்பது , ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தரப்பினர் இலாபமீட்ட ஏனையோர் நட்டமடையும் ஒவ்வொரு விளையாட்டையும் குறிக்கும் சொல்லாகும். எனவே ஒவ்வொரு பங்கேற்பாளரும் மற்றவரிடமிருந்து பணம் அல்லது ஏதாவதொன்றைப் பெறுவது அல்லது வேறொருவர் வெல்வதற்காக தனது பணத்தை இழப்பது என்ற அடிப்படையில் நடக்கக் கூடியதாகும்.
அல்குர்ஆன், ஸுன்னா மற்றும் அறிஞர்களின் ஒருமித்த கருத்தின் பிரகாரம் சூதாட்டம் ஹராமான ஒன்றாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் : "ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் வெற்றியடைவதற்காக இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்". (மாஇதா : 90).
1. வென்றவர் தோற்றவரிடமிருந்து பணம் பெறுவதாக நிபந்தனையிடப்படும் அனைத்து விளையாட்டுக்களும் சூதாட்டமே. உதாரணமாக ஒரு குழுவினர் (பலூட் அல்லது டெக் போன்ற வகையில்) சீட்டாடுவதைப் போன்று. அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை வைத்து யார் வெற்றி பெறுகிறார்களோ அவர் எல்லா பணத்தையும் எடுத்துக்கொள்வார்.
2. குறிப்பிட்ட ஓர் அணி அல்லது வீரர் வெற்றி பெறுவார் என பந்தயம் கட்டுதல். பந்தையக் காரர்கள் குறிப்பிட்ட பணத்தை வைத்து, ஒவ்வொருவரும் தமது அணி, அல்லது வீரர் வெற்றி பெறுவதாகப் பந்தயம் கட்டுவர். தமது அணி வென்றால் முழுப்பணத்தையும் எடுத்துக் கொள்வார். தோற்றால் அனைத்துப் பணத்தையும் இழந்து விடுவார்.
3. லொத்தர் மற்றும் அதிர்ஷ்டச் சீட்டு. உதாரணமாக ஒரு டொலரைக் கொண்டு ஓர் அட்டையை வாங்குவதைப் போன்றாகும்.பல அட்டைகளில் குழுக்கல் செய்யப்பட்டு இவருடைய அட்டை வென்றால் மேலதிக தொகையைப் பெறுகின்றார். அத்தொகை கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம்.
4. வழக்கமான செலவை விட அதிக பணம் செலுத்தி தொலைபேசி அல்லது கைபேசி குறுந்தகவல்கள் மூலம் போட்டிகளில் பங்கேற்பது. அதேபோன்றுதான் மின்சார, மின்னணு, இணையத்தளம் மூலமாக விளையாடப்படும் அனைத்து வித சூதாட்ட விளையாட்டுக்களும் இதில் அடங்கும். இதில் விறையாடுபவர் பணத்தை வெல்தல் அல்லது இழத்தல் என்ற உறுதியற்ற இரண்டில் ஒரு நிலையை அடைந்தே தீர்வார்.
சூதாட்டத்தில் வென்றவருக்கு ஏதோ பயன் கிடைக்கின்றது என்றாலும் அதன் மூலம் கிடைக்கும் பலன், பயன்பாடுகளை விட அதன் தீங்கையும், பாவத்தையுமே அல்லாஹ் மிகைப்படுத்தியுள்ளான் : "(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது”. (பகரா : 219).
சூதாட்டத்தினால் ஏற்படும் தனிநபர், சமூகப் பாதிப்புக்கள் :
اختر مستوى الشرح المناسب لك
يحتوي الدرس الآن على طبقات اختيارية تساعدك على المراجعة السريعة أو التعمق دون مغادرة الدرس.
- الملخص: نظرة سريعة في نحو دقيقة.
- الأساسي: محتوى الدرس الأصلي وهو المسار المعتمد للتقدم.
- المتعمق: تفاصيل إضافية اختيارية عند توفرها.
تقدمك وإكمال الدرس يعتمدان دائما على صفحات المستوى الأساسي.