கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் வாடகைக்கு விடுதல் (இஜாரா)

இஸ்லாத்தில் வாடகைக்கு விடுவதன் அர்த்தம், அது பற்றிய சில மார்க்க சட்டங்களை இப்பாடத்தில் அறிவோம்.

  • வாடகைக்கு விடுதலின் அர்த்தம், அதன் சட்ட்ம், அது சட்டபூர்வமாவதற்கான காரணிகள் பற்றி அறிதல்.
  • வாடகைக்கு விடுதலின் அடிப்படை அம்சங்கள், நிபந்தனைகளை அறிதல்.
  • கூலி, பணியாளின் வகைகள் பற்றி அறிதல்.
  • வாடகை ஒப்பந்தம் முடிவுறக்கூடிய நிலைகளை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

வாடகைக்கு விடல் என்பது

குறிப்பிட்ட அல்லது உறுதியுரையில் வர்ணிக்கப்பட்ட ஒரு சொத்திலிருந்து கிடைக்கப்பெறும் பயனை அறியப்பட்ட காலத்திற்கு அனுமதிக்கப்பட்ட முறையில் பயனடைவதற்காக, அல்லது குறிப்பிட்ட ஒரு தொகைக்காக ஒருவரைக் கூலிக்கமர்த்தும் போது செய்யப்படும் ஒப்பந்தமே இஜாரா எனும் வாடகைக்கு விடலாகும்.

இஸ்லாமிய ஷரீஅத்தில் இஜாராவின் சட்டம்

வாடகைக்கு விடல் (இஜாரா) அனுமதிக்கப்பட்ட ஆகுமான ஒரு முறையாகும். அல்குர்ஆன், ஸுன்னா, இஜ்மாஃ ஆகியன இஜாரா முறையை சட்டபூர்வமாக்கியுள்ளன. இரு தரப்பினருக்கிடையில் நடந்து முடிந்ததும் முறிக்க முடியாத ஒப்பந்தமாகவே இது இருக்கும். உனக்கு வாடகைக்கு விட்டேன், குத்தகைக்கு விட்டேன், கூலிக்கு வழங்கினேன் போன்ற சமூகத்தில் அறியப்பட்ட வார்த்தைகள் மூலம் இவ் ஒப்பந்தம் நிறைவேறும்.

வாடகைக்கு விடுவது அனுமதி என்பதற்கான ஆதாரங்கள் சில :

அல்லாஹ் கூறுகின்றான் : "எனது தந்தையே! (மூஸாவாகிய) இவரை கூலிக்கு வேலைக்கமர்த்துங்கள், நீங்கள் வேலைக்கமர்த்தும் இவர் வலிமையானவர் நம்பிக்கையானவர்" என்று அவர்கள் இருவரில் ஒரு பெண் கூறினாள். (கஸஸ் : 26).

ஆஇஷா(ரலி) கூறுகின்றார்கள் : நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் பனூ தீல் குலத்தைச் சேர்ந்த ஒருவரை (வழிகாட்டுவதற்காகக்) கூலிக்கு அமர்த்தினார்கள். அவர் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களின் மார்க்கத்தில் இருந்தார். நபி(ஸல்) அவர்களும், அபூ பக்ர்(ரலி) அவர்களும் தம் ஒட்டகங்களை அவரிடம் கொடுத்து 'மூன்று இரவுகள் கழித்து எங்கள் ஒட்டகங்களுடன் ஸவ்ர் குகையில் எங்களைச் சந்திக்க வேண்டும்' என்று அவரிடம் கூறினார்கள். அவர், (அவ்வாறே) மூன்றாம் நாள் காலையில் அவர்களின் ஒட்டகங்களுடன் அவர்களைச் சந்தித்தார். (புஹாரி 2264).

இஸ்லாமிய ஷரீஅத்தில் இஜாரா முறை சட்டபூர்வமானதற்கான காரணம்

வாடகை என்பது மக்களுக்கு தமது வாழ்வில் அதிக பயன்களைக் கொடுக்கின்றது. அதில் ஒருவருக்கொருவர் பயன்பாடுகளை பரிமாறிக்கொள்வது உள்ளது. மனிதர்களுக்கு வேலைக்காக பணியாட்கள் தேவைப்படுகின்றார்கள், வசிக்க வீடு தேவைப்படுகிறது, பிரயாணத்திற்காகவோ, பொருட்களை சுமக்கவோ, வேறு பயன்பாட்டிற்காகவோ வாகனங்கள் தேவைப்படுகின்றன. அதிக மக்களுக்கு இவற்றைக் கொள்வனவு செய்யும் வசதியில்லை. இதனால் மக்களுக்கு இலகுபடுத்துவதற்காகவும், சிறு தொகைப் பணத்தின் மூலம் இரு தரப்பினரும் பயனடைவதுடன் அவர்களது தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகவும் அல்லாஹ் வாடகை முறையை அனுமதித்துள்ளான். அவனுக்கே அனைத்துப் புகழும்.

இஜாராவின் வகைகள்

١
வீடு, வர்த்தக நிலையம் போன்ற குறிப்பிட்ட ஒரு பொருளை வாடைக்கு எடுத்தல் அல்லது கொடுத்தல்.
٢
குறிப்பிட்ட ஒரு பணிக்காக கூலிக்கமர்த்துதல். உதராணமாக மதிலொன்று கட்டவோ, வேளான்மை செய்யவோ கூலிக்கமர்த்துவதைக் குறிப்பிடலாம்.

கூலிக்காரர்களின் வகைகள்

١
தனியார் கூலிக்காரர்
٢
கூட்டுக் கூலிக்காரர்

தனியார் கூலிக்காரர்

இவர் ஒரு நபரால் தனக்கு வேலை செய்ய குறிப்பிட்ட காலத்திற்கு பணியமர்த்தப்பட்ட ஒருவர். இவர் வேறொருவரிடம் பணியாற்ற முடியாது, குறிப்பிட்ட அக்காலத்தினுள் அவ்வாறு பணியாற்றினால் அதற்கேற்ப அவரது ஊதியத்திலிருந்து குறைக்கப்படும். தான் முன்வந்து பணியை மேற்கொண்டால் அதற்குரிய கூலிக்குத் தகுதியாகின்றார். குறிப்பிட்ட காலம் முடியு முன் கூலிக்கமர்த்தியவர் நோய், இயலாமை போன்ற தகுந்த காரணமின்றி ஒப்பந்தத்தை ரத்துச் செய்தால் பணியாளுக்கு முழுமையான கூலி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு தகுந்த காரணத்திற்காக ரத்துச் செய்தால் பணியாற்றிய காலத்திற்குரிய கூலி மாத்திரம் வழங்கப்பட வேண்டும்.

கூட்டுக் கூலிக்காரர்

இவர் குறிப்பிட்டவருக்கு அல்லாமல் செயற்பாட்டின் மூலம் பலர் பயனடையக்கூடிய ஒருவர். உதாரணமாக கொல்லன், குழாய்ப்பணியாளர், வர்ணம் பூசாளர், தையல் காரர் போன்றவர்களைக் குறிப்பிடலாம். அவர் தனக்காக உழைத்து, அவரிடம் கேட்பவர்களிடமிருந்து பொறுப்புக்களை ஏற்றுக்கொள்பவராக இருந்தால் அவரை வேலைக்கு அமர்த்தியவர் மற்றவர்களுக்காக வேலை செய்வதைத் தடுக்க முடியாது. வேலை முடியும் வரை கூலி பெறத் தகுதயடையமாட்டார்.

வாடகை ஒப்பந்தத்தின் பிரதான அடிப்படைகள்

١
ஒப்பந்தம் செய்வோர்
٢
ஒப்பந்த வார்த்தை
٣
பயன்பாடு
٤
கூலி

ஒப்பந்தம் செய்வோர்

ஈஜாப் - கபூலுக்குத் உரித்துடைய கூலிக்கமர்த்துபவர், கூலியாள் ஆகிய இரு தரப்பினரையும் இவ்வார்த்தை உள்ளடக்கும்.

ஒப்பந்த வார்த்தை :

இது ஈஜாப் - கபூலைக் குறிக்கின்றது. அதாவது ஒப்பந்தத்தின் வடிவத்தை சட்டப்பூர்வமாக அல்லது வழக்கமாக நிரூபிக்கும் எந்தவொரு செயலும் இதில் செல்லுபடியாகும்.

பயன்பாடு :

இஜாரா ஒப்பந்தத்தின் நோக்கமே இதுதான். இப்பயன்பாடு மனிதனாகவோ, பிராணியாகவோ, ஒரு பொருளாகவோ இருக்கலாம். அதனடிப்படையிலே ஒப்பந்தம் செய்யப்படுகின்றது.

கூலி :

இது ஒரு பொருளிலிருந்தோ, மனிதனிடமிருந்தோ பெறப்பட்ட பயனுக்குப் பிரதியீடாக வழங்கப்படும் தொகையாகும். இது வியாபாரத்தில் கிரயத்திற்கு ஈடானதாகும்.

இஜாரா நிறைவேறுவதற்கான நிபந்தனைகள்

١
இரு தரப்பினரும் கொடுக்கல் வாங்கல் செய்ய முடியுமானவர்களாக இருத்தல் வேண்டும். அதாவது ஒப்பந்தக்காரர்கள் பொறுப்புணர்வுள்ளவர்களாகவும், சித்தசுவாதீனமுள்ளவர்களாகவும் இருத்தல் வேண்டும். பிரித்தறியும் வயதை அடையாத சிறு பிள்ளை, பைத்தியகாரருடைய வாடகை ஒப்பந்தம் செல்லுபடியாக மாட்டாது. வேலையைப் பணிக்கவும், செயற்படுத்தவும் தகுதியுள்ளவராக இரு தரப்பினரும் இருக்க வேண்டும்.
٢
பயன்பாடு அறியப்பட்டிருத்தல், உதாரணமாக வீட்டில் குடியிருத்தல், பணியாளைக் கூலிக்கமர்த்தல் போன்றதைக் குறிப்பிடலாம்.
٣
கூலி அறியப்பட்டிருத்தல்.
٤
வாடகைக்கு விடப்படும் பயன்பாடு ஹராமானதாக அல்லாமல் மார்க்க அனுமதியுள்ளதாக இருத்தல் வேண்டும். எனவே இசை போன்ற தடுக்கப்பட்ட ஒன்றிற்காக வாடகைக்கு விடவோ, தேவாலயம், மதுபான விற்பனை போன்ற தேவைகளுக்காக வீட்டை வாடகைக்கு விடவோ கூடாது.
٥
வாடகைக்கு விடப்படும் பொருளை நேரில் பார்த்தோ, வர்ணனை மூலமே அறிந்திருத்தல், அதன் பாகங்களுக்கல்லாமல் பயன்பாட்டிற்கே ஒப்பந்தம் நடைபெறல் வேண்டும், அப்பொருளைக் கையளிக்கும் சக்தியைப் பெற்றிருத்தல், அது அனுமதிக்கப்பட்ட பயன்பாடாக, வாடகைக்கு விடுபவரின் உடமையாக அல்லது வாடகைக்கு விட அனுமதிக்கப்பட்டவராக இருத்தல் வேண்டும்.
٦
இரு தரப்பினரும் திருப்தியுடன் உடன்படிக்கையை ஏற்றல் வேண்டும்.
٧
இரு தரப்பிலிருந்தும் திருப்தியைத் தெரிவிக்கும் ஈஜாப் - கபூல் வார்த்தை வெளிப்படுதல்.
٨
மாதம், வருடம் என்ற அமைப்பில் வாடகையின் காலம் அறியப்பட்டிருத்தல்
٩
பயன்பாட்டைப் பாதிக்கும் வகையில் வாடகைப் பொருளில் குறைகள் ஏதும் இல்லாதிருத்தல்.

கூலி கட்டாயமாகும் நேரம்

ஒப்பந்தத்தின் மூலம் கூலி கட்டாயமாகி விடுகின்றது. வாடகைக் காலம் முடிந்தவுடன் கூலியை ஒப்படைப்பது அவசியமாகும்.

இரு தரப்பினரும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் கூலியை நேரகாலத்துடனோ, தாமதமாகவோ, தவணைமுறையிலோ பெற்றுக் கொள்ளலாம். கூலிக்காரர் தனது பணியை முறையாக நிறைவேற்றியதும் கூலி பெறத் தகுதியடைந்து விடுகின்றார்.

வாடகை ஒரு பொருளின் பயன்பாட்டில் இருந்தால் முழுப்பயனையும் அடைந்தவுடன் கூலி கொடுக்கப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : ''மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்' என்று அல்லாஹ் கூறினான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன்; இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்!'' (புஹாரி 2227).

வாடகை ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நிலைகள்

١
வீடு, வாகனம் போன்ற வாடகைக்கு விடப்பட்ட குறித்த பொருள் அழிதல்.
٢
வாடகைக் காலம் முடிவுறல்
٣
இரு தரப்பினரில் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க மறு தரப்பு தள்ளுபடி செய்தல்
٤
வாடகைக்கு எடுத்தவரின் தவறின்றி வாடகைப் பொருளில் குறையேற்படல், உதாரணமாக வீடு உடைந்து விழல், ஆயுதம் சேதமடைதல்.

இரு தரப்பில் ஒருவர் மரணிப்பதன் மூலம் இஜாரா ரத்தாக மாட்டாது. வாடகைப் பொருளை விற்கவும் முடியாது. தனியார் வேலைக்காகக் கூலிக்கமர்த்தப்பட்ட ஒருவர் இடையில் மரணித்தால் ஒப்பந்தம் ரத்தாகி விடும். வடாகைக் காலம் முடிவுற்றவுடன் வாடகைக்கு எடுத்தவர் அதன் பயன்பாட்டை நிறுத்தி விட்டு, அது அசையும் பொருளாக இருந்தால் கொடுத்தவரிடம் ஒப்படைத்து விட வேண்டும்.

வாடகை, வியாபாரம் இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு

١
வாடகையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட பயன்பாட்டை ஒரே தடவையில் பூர்த்தி செய்ய முடியாது, வியாபாரத்தில் ஒரே நேரத்தில் முழுப் பொருளையும் கையகப்படுத்தலாம்.
٢
வாடகைக்கு விட முடியுமான அனைத்தையும் விற்க முடியாது, ஏனெனில் மனிதனை ஒரு வேலைக்காகக் கூலிக்கமர்த்தலாம், ஆனால் அவனை விற்க முடியாது, ஏனெனில் அவன் விற்பனைப் பண்டமில்லை.
٣
வாடகையும் ஒரு வகை வியாபாரமாக இருந்தாலும் இதில் ஒப்பந்தம் நடைபெறுவது ஒரு பொருளின் பயன்பாட்டுக்கே தவிர அப்பொருளுக்கல்ல. ஆனால் வியாபார ஒப்பந்தங்கள் அனைத்தும் பொருளுக்கே நடக்கின்றன.
٤
வாடகைக்கு விடுதல் உடனடியாக அமுலாகும் விதத்திலும் நிகழும், எதிர்காலத்தில் அமுலாகும் விதத்திலும் நிகழும். அதேவேளை வியாபாரம் உடனடியாக மாத்திரமே நிகழும்.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்