கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் இரவல்

இரவல் கொடுப்பதன் அர்த்தம், அது பற்றிய சில மார்க்க சட்டங்களை இப்பாடத்தில் அறிவோம்.

  • இரவல் என்பதன் அர்த்தத்தை அறிதல்.
  • இரவலுடன் தொடர்பான சட்டங்களை அறிதல்.
  • இரவலுக்கும், அமானிதப் பொருளிற்கும் இடையிலான வேறுபாட்டை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

இரவல் என்றால் என்ன

எத்தகைய பிரதியீட்டையும் பெறாது ஒரு பொருளிலிருந்து பயன்பெற அனுமதிப்பதே இரவலாகும். பிரதியீடு இல்லாமையினால் இதற்கு அரபு மொழியில் ஆரியா எனப்படுகின்றது.

இரவலின் சட்டம்

இரவல் நன்மை, இறையச்சத்தில் ஒத்துழைப்பு வழங்கும் முறைகளில் ஒன்றாகும். அல்குர்ஆன், ஸுன்னா, இஜ்மா, கியாஸ் அனைத்து மூலாதாரங்கள் மூலமும் இது சட்டபூர்வமானதாகும். இது விரும்பும் போது முறிக்க முடியுமான அனுமதிக்கப்பட்ட ஒப்பந்தமாகும், இரு தரப்பினரும் விரும்பிய நேரத்தில் அதனை இரத்துச் செய்யலாம். இதில் உபகாரம், தேவைகளை நிவர்த்தி செய்தல், அன்பு, கருணையை வரவழைத்தல் போன்றன இருப்பதால் இது ஒரு விரும்பத்தக்க வணக்கமாகும். பொருளின் உரிமையாளருக்கு அதில் தேவைகளில்லாத போது, மற்றொரு மனிதனுக்கு அதில் தேவையிருக்கும் போது அதனை இரவல் கொடுப்பது இன்னும் விரும்பத்தக்கது. இதை அறிவிக்கக்கூடிய எந்த வார்த்தை மூலமும் நிறைவேறும்.

இரவல் சட்டபூர்வமானதற்கான காரணம்

சில பொருட்களிலிருந்து பயனடையும் தேவை சிலவேளை மனிதனுக்கு இருக்கலாம், அதேநேரம் அதனைக் கொள்வனவு செய்யுமளவு வசதியும் இருக்காது, அதனை வாடகைக்குப் பெற்று, கூலி கொடுக்கவும் முடியாதிருக்கலாம், மறு புறம் இன்னும் சிலர் தம்மிடம் உள்ள பொருளை தேவையுள்ளவருக்கு தற்காலிகமாக பயன்படுத்தி விட்டு திருப்பித் தருவதைப் பொருந்திக் கொண்டாலும் வெகுமதியாகவோ, தர்மமாகவோ வழங்க மனம் இடம்கொடுக்காது. இரவல் இரு தரப்பினருடைய தேவையையும் நிவர்த்தி செய்கின்றது.

இதனால் இரவல் பெறுபவரின் தேவையை நிவர்த்தி செய்வதற்காக இரவலை அல்லாஹ் சட்டபூர்வமாக்கியதுடன், பொருள் தனக்கு சொந்தமாக இருப்பதுடனேயே அதன் பயன்பாட்டை தனது சகோதரனுக்கு அடையக் கொடுத்ததனால் இரவல் கொடுத்தவருக்கு நன்மையும் வழங்குகின்றான்.

அல்லாஹ் கூறுகின்றான் : "இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்". (மாஇதா : 2)

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : மதீனாவில் (பகைவர்கள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி மக்களிடையே) பீதி ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அபூ தல்ஹா(ரலி) அவர்களிடமிருந்து 'மன்தூப்' என்று அழைக்கப்பட்ட குதிரை ஒன்றை இரவல் வாங்கினார்கள். அதில் ஏறி சவாரி செய்தார்கள். திரும்பி வந்தபோது, '(எதிரிகளின் படை எதனையும் அல்லது பீதியூட்டும்) எதனையும் நாம் காணவில்லை. தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகவே நாம் இதனைக் கண்டோம்" என்று கூறினார்கள். (புஹாரி 2627, முஸ்லிம் 2307).

இரவல் செல்லுபடியாவதற்கான நிபந்தனைகள்

١
குறித்த பொருள் பயன்பெறுவதனால் அழியக்கூடியதாக இல்லாதிருத்தல்.
٢
பொருளின் பயன் அனுமதிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். எனவே மது பரிமாற்றத்திற்காக வாகனத்தை இரவல் கொடுக்க முடியாது.
٣
இரவல் கொடுப்பவர் குறித்த பொருளை அன்பளிப்புச் செய்யத் தகுதியுடையவராக, பொருளுக்கு சொந்தக்காரராக, இரவல் கொடுக்க அனுமதிக்கப்பட்டவராக இருத்தல் வேண்டும்.
٤
இரவல் பெறுபவர் கொடுக்கல் வாங்கலுக்குத் தகுதியானவராக இருத்தல் வேண்டும்.

இரவலின் பிரதான அடிப்படைகள்

١
இரவல் கொடுப்பவர் : இவர் தான் குறித்த பொருளுக்குச் சொந்தக்காரர்.
٢
இரவல் பெறுபவர் : இவர் தான் குறித்த பொருளின் மூலம் பயன் பெறுபவர்.
٣
இரவல் பொருள் : இதுதான் வாகனம், கருவி போன்ற இரவல் வழங்கப்படும் பொருள்
٤
ஒப்பந்த வார்த்தை : இது நடைமுறைக்கேற்றவாறு இரு தரப்பினருக்கும் இடையில் பரிமாரப்படும் ஈஜாப் - கபூல் வார்த்தை.

இரவல் பொருளைப் பாதுகாப்பது, அதில் கவனமெடுப்பது, அழகிய முறையில் பயன்படுத்துவது, அதன் சொந்தக்காரருக்கு குறைகளற்று முழுமையாக ஒப்படைத்தல் என்பன இரவல் பெற்றவருக்குக் கடமையாகும். அவருடைய கையிலிருக்கும் போது பொருள் பயன்படுத்தமாலேயே தவறினால் அது அவருடைய அலட்சியத்தினாலாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அப்பொருளுக்குப் பொறுப்பாக வேண்டும். அனுமதிக்கப்பட்ட பயன்படுத்தலின் போது தவறினால் அதில் இரவல் பெற்றவர் அத்துமீறினாலோ, அலட்சியமாக நடந்தாலோ தவிர பொறுப்பாக மாட்டார்.

இரவல் பொருளைத் திருப்பி ஒப்படைப்பதன் சட்டம்

தேவை முடிந்ததும் தான் பெற்ற பொருளை எவ்விதக் குறைகளுமின்றி எடுத்தது போன்றே திருப்பி ஒப்படைப்பது இரவல் எடுத்தவருக்குக் கடமையாகும். அதனைத் தடுத்து வைத்துக் கொள்வதோ, மறுப்பதோ கூடாது, அவ்வாறு செய்தால் அவர் துரோகியாகவும் பாவியாகவும் ஆகி விடுகின்றார்.

இரவல் பெற்றவருக்குப் பாதிப்பு இல்லாவிடில் அப்பொருளை தான் விரும்பிய நேரத்தில் திரும்பப் பெறும் உரிமை இரவல் வழங்குனருக்கு உண்டு. அவ்வாறு பெறுவதில் பயனாளருக்குப் பாதிப்புக்கள் ஏதுமிருந்தால் அது தீரும் வரை தாமதப்படுத்த வேண்டும். உதாரணமாக இரவல் பெற்ற நிலத்தில் பயனாளர் வேளான்மை செய்தால் அதனை அருவடை செய்யும் வரை வழங்குனருக்கு அதனைத் திரும்பப் பெற முடியாது.

அல்லாஹ் கூறுகின்றான் : "நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்". (நிஸா : 58)

இரவலுக்கும், நம்பிக்கைப் பொறுப்பிற்குமிடையிலான வேறுபாடு

١
இரவல் எடுத்ததை மறுப்பவர் திருடனைப் போன்று கை துண்டிக்கப்படுவார். நம்பிக்கைப் பொறுப்பில் அவ்வாறில்லை.
٢
இரவல் என்பது ஒரு மனிதன் தனது தேவைக்காகவே எடுக்கின்றார். எனவே அவர் எந்நிலையிலும் இரவல் பொருளுக்குப் பொறுப்பாவார். ஆனால் நம்பிக்கைப் பொறுப்பில் ஒருவர் வணக்கம் என்ற அடிப்படையிலேயே அதனைப் பொறுப்பேற்கின்றார். அதனால் அத்துமீறினாலோ, அலட்சியமாக இருந்தாலோ தவிர பொறுப்பாக மாட்டார்.

இரவல் நிறைவடைதல்

١
தவணை முறையான இரவலில் தவணை வந்ததும் நிறைவுறும்.
٢
இரவல் கொடுத்தவர் அதனை வாபஸ் பெறும் போது நிறைவுறுகின்றது. இது பல நிலைகளில் நிகழும்.
٣
இரு தரப்பினரில் ஒருவரின் சித்தசுவாதீனமிழத்தலின் மூலம் இரவல் ஒப்பந்தம் நிறைவுறுகின்றது.
٤
வங்குரோத்து நிலை, பொறுப்புணர்வின்மையின் காரணமாக இரு தரப்பினரில் ஒருவரின் சொத்து முடக்கப்பட்டால் இரவல் ஒப்பந்தம் நிறைவுறுகின்றது.
٥
இரு தரப்பினரில் ஒருவரின் மரணத்தின் மூலம் இரவல் ஒப்பந்தம் நிறைவுறுகின்றது.
٦
இரவல் பொருள் அழிவதன் மூலம் ஒப்பந்தம் நிறைவுறுகின்றது.
٧
இரவல் பொருளின் உரிமம் கைமாறும் போது ஒப்பந்தம் நிறைவுறுகின்றது.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்