கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் ஸகாத்தின் இலக்குகள்

ஸகாத் இஸ்லாத்தின் மூன்றாவது அடிப்படைத் தூணாகும். இப்பாடத்தில் அதன் இலக்குகள், அது விதியாக்கப்பட்டதற்கான காரணிகள் போன்றவற்றைக் கற்போம்.

  • ஸகாத் விதியாக்கப்பட்டதற்கான இலக்குகளை அறிதல். 
  • இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

    ஸகாத்

    ஸகாத் என்பது ஒரு பொருளாதாரக் கடமையாகும். வசதியற்றவர்கள், தேவையுடையவர்களின் சிரமங்களை நீக்கும் விதத்தில் அவர்களுக்கு வழங்க வேண்டுமென செல்வந்தர்கள்மீது அல்லாஹ் இதனைக் கடமையாக்கியுள்ளான். இதனால் செல்வந்தருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட மாட்டாது.

    ஸகாதின் இலக்குகள்

    1. பணத்தை நேசிப்பது மனித உள்ளுணர்வாகும். அதனைப் பாதுகாக்கவும், பற்றிப் பிடித்துக்கொள்ளவும் இந்த உணர்வு அவனைத் தூண்டிக் கொண்டிருக்கும். எனவே உலோபித்தனம், கஞ்சத்தனத்திலிருந்து உள்ளத்தைத் தூய்மைப்படுத்தவும், உலகையும், அதன் அற்பப் பொருட்களையும் பேராசை கொள்வதைக் கட்டுப்படுத்தவும் ஸகாத் வழங்குவதை மார்க்கம் விதியாக்கியுள்ளது. அல்லாஹ் கூறுகின்றான் : "அவர்களைத் தூய்மைப்படுத்தும் (ஸகாத் எனும் கடமையான) தர்மத்தை அவர்களின் செல்வங்களிலிருந்து (நபியே!) நீர் எடுத்து அதன் மூலம் நீர் அவர்களைப் பரிசுத்தப்படுத்துவீராக". (தவ்பா : 103).

    2. ஸகாத் வழங்குவதன் மூலம் ஒத்திசைவு, பரிச்சியத்தின் அடிப்படை அடையப்படுகின்றது. ஏனெனில் இயற்கையாகவே மனித உள்ளம் அதற்கு நலவு செய்தவர்களை நேசிக்கின்றது. இதன் மூலம் முஸ்லிம் சமூகத்தினர் நேசமுடையவர்களாகவும், ஒரே கட்டிடத்தைப் போன்று ஒருவரையொருவர் பலப்படுத்தக் கூடியவர்களாகவும் வாழ்வார்கள். திருட்டு, கொள்ளை, மோசடி சம்பவங்கள் குறைந்து விடும்.

    ஸகாதின் இலக்குகள்

    ஸகாதின் இலக்குகள்

    ஸகாத் யாருக்கு விநியோகிக்கப்பட வேண்டும்?

    ஸகாத் விநியோகிக்கப்பட வேண்டிய வழிகளை இஸ்லாம் வரையறுத்துள்ளது. இப்பிரிவினர்களில் ஒரு சாராருக்கு மாத்திரமோ ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு இதனை வழங்க முடியும். முஸ்லிம்களில் இதனைப் பெறத் தகுதியானோருக்கு விநியோகிக்கும் பொறுப்பை மேற்கொள்ளும் நிறுவனங்கள், நலன்புரி அமைப்புக்களுக்கும் இதனை ஒப்படைக்கலாம். வழங்குனரின் ஊர் எல்லைக்குள் விநியோகிப்பதே மிக ஏற்றமாகும்.

    ஸகாத் பெறத் தகுதியானவர்கள் :

    ١
    வறியவர்கள், இவர்கள் அறவே ஏதுமற்றவர்கள், அல்லது வருடாந்த செலவினத்தில் பாதியைவிடக் குறைவாகப் பெற்றுக் கொள்பவர்கள்.
    ٢
    ஏழைகள் : இவர்கள் வருடாந்த செலவினத்தில் பாதியளவு அல்லது அதைவிட அதிகமாகப் பெற்றுக் கொள்பவர்கள்.
    ٣
    ஸகாத் வசூலித்து,விநியோகிக்கும் பணியில் ஈடுபடுவோர் நாட்டுத் தலைவருக்கு உதவியாக செயல்படும் ஸகாத் வசூலிப்போர், பணியாளர்கள்.
    ٤
    உள்ளம் ஈர்க்கப்படுவோர் : இவர்கள் தமது சமூகத்தில் செல்வாக்குள்ள இஸ்லாத்திற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற தலைவர்கள், அல்லது அவர்களுக்கு நிகரானவர்கள் இஸ்லாத்தில் இணையவோ, இணைந்தவர்களின் ஈமான் பலப்படவோ, முஸ்லிம்களை விட்டும் கெடுதிகளைத் தடுக்கவோ எதிர்பார்த்து வழங்கப்படுவோர்.
    ٥
    அடிமைகள் : தன்னை விடுவித்துக் கொள்ள எஜமானுக்கு பணம் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்திருக்கும் அடிமைகள், இந்த ஸகாத் பணத்திலிருந்து அடிமைகளை விலைக்கு வாங்கி உரிமையிடவும், முஸ்லிம் சிறைக்கைதிகளை விடுக்கவும் முடியும்.
    ٦
    கடனாளிகள் : இவர்கள் அனுமதிக்கப்பட்ட சுய தேவைக்காக கடன் எடுத்து செலுத்த முடியாத நிலையில் உள்ளவர்கள், அல்லது சமூக ஒற்றுமைக்காக பொதுநலன் என்ற ரீதியில் கடன் எடுத்தவர்கள்.
    ٧
    அல்லாஹ்வின் பாதியில் போரிடுவோர் : இவர்கள் இஸ்லாத்தை பாதுகாக்க தன்னார்வளர்களாகப் போராடுவோராகும். இவர்களுக்கென பிரதியீடுகளோ, மாதாந்த கொடுப்பனவுகளோ பொதுநிதியிலிருந்து நிர்ணயிக்கப்பட்டிருக்க மாட்டாது.
    ٨
    பிரயாணி : இவர் இடைநடுவில் நிர்க்கதிக்குள்ளாகி, பணம் தேவைப்படும் பிரயாணி, அனுமதிக்கப்பட்ட பயணமாக இருக்கும் பட்சத்தில் அவரது தேவை நிறைவேறும் அளவிற்கு ஸகாத்திலிருந்து வழங்கப்படும்.

    ஸகாத் விநியோகிக்கும் வழிகளைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : “(ஸகாத் என்னும்) தானங்கள் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்”. (தவ்பா : 60).

    உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


    பரீட்சையை ஆரம்பிக்கவும்